tamilnadu

ஜூன் 2 இல் பள்ளிகள் திறப்பு உறுதி

ஜூன் 2 இல் பள்ளிகள் திறப்பு உறுதி

பள்ளிக் கல்வித் துறை தகவல்

சென்னை, மே 23 -  தமிழகத்தில் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்ற றிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின்கீழ் செயல் படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் கோடை  விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூன் 1 ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளி கள் திறப்பு தள்ளிப் போகலாம் என தகவல்கள் வெளியா கின. இந்நிலையில், வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் திட்டமிட்டபடி ஜூன் 2 இல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்  கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த வாரம் தெரி வித்திருந்தார். தற்போது தொடக்கக் கல்வி இயக்ககம் இதை உறுதி செய்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூன் 2 ஆம் தேதி  பள்ளிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி  தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கு மாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.