tamilnadu

img

பசு குண்டர்களால் கொல்லப்பட்ட முஸ்லிம் சிறுவர்களின் குடும்பத்திற்கு உதவித்தொகை

பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் புறநகர் மாவட்டத்தில் உள்ள மகாநதி ஆற்றுப்பாலம் அருகே கடந்த ஜூன் 7 அன்று இறைச்சிக்காக பசுவதை மேற்கொண்டதாக பாஜக-ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற பசுக் குண்டர்கள் 3 முஸ்லிம் சிறுவர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்தனர். இந்நிலையில், அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தூதுக்குழு கொல்லப்பட்ட சிறுவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகையும் வழங்கினர்.