tamilnadu

img

தெரிந்து கொள்வதற்றும் புரிந்து கொள்வதற்குமான அடிப்படையே அரசியல் - சு.வெங்கடேசன் எம்.பி

உக்ரைன் நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முயற்சி எடுத்ததோடு, ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் உக்ரைன் ராணுவம் குவிக்கப்பட்டதைத்தொடர்ந்த ரஷ்யா உக்ரைன்மீது தாக்குதலை தொடங்கி உள்ளது. இந்நிலையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 219 இந்தியர்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் தாய் நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர். 
ருமேனியாவிலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் இன்றிரவு மும்பை வந்தடையும். மாணவர் மீட்புப் பணிகளைத் தனிப்பட்ட அளவில் தாம் கண்காணித்துவருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆனால் போர் நடைபெறும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் முன்கூட்டியே இந்தியர்களை மீட்க இந்திய அரசு தவறி விட்டதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், போர் நடைபெறும் என இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டிருந்ததாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "ஜனவரி 9 அன்று வெளியிடப்பட்ட எமது கட்சியின் அகில இந்திய மாநாட்டின் தீர்மானம் 2 மாதத்திற்கு முன்பே உக்ரைனில் நிகழப்போகும் தாக்குதல் குறித்து தெளிவாக முன்வைக்கிறது.
20000 க்கும் மேற்பட்ட நமது மாணவர்கள் கல்விபயிலும் உக்ரைனின் இந்திய தூதுவரோ அன்று காலை செய்தியைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்கிறார்.
தெரிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்குமான அடிப்படையே அரசியல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.