இந்துக்களின் உணர்வுகளை பாதுகாப்பதாக ஆர் எஸ் எஸ் - பாஜகவினர் கூறுவது, போலி இந்துயிசத்தின் பாசிச வெளிப்பாடேயின்றி வேறில்லை. மதவெறி அரசி யல் நோக்கங்களுக்காக மதம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக்காட்டும் வெளிப்பாடு இது. சுதந்திர இந்தியாவுக்காக நமது மக்கள் ஏற்றுக்கொண்ட அரசியல் சாசனத்துக்கே முற்றிலும் முரணான கோட்பாடு இது. அரசியல் நிர்ணய சபையில் மிகப்பெரும்பாலான உறுப்பினர்களாக இருந்த இந்துக்களால் உருவாக் கப்பட்டது நமது அரசியல் சாசனம். நமது நாட்டின் எதிரிகளுடனான போராட்டங்களில் தமது உயிரையே கூட இழந்து கொண்டிருக்கிற, நாட்டின் ஒற்றுமையை உயர்த்திப்பிடித்துக் கொண்டிருக்கிற இந்து மக்களால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருவது நமது அரசியல் சாசனம். ஆர். எஸ். எஸ். பரிவாரம் இன்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது எந்த இந்துக்களுக்காக?