ரூ.4 லட்சம்: கரூர் மாவட்டக்குழு வழங்கியது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெறுகிறது. இதனையொட்டி கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கருத்தரங்கம் மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மார்ச் 11 செவ்வாயன்று கரூர் உழவர் சந்தையில் நடை பெற்றது. பொதுக் கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாநகரச் செய லாளர் எம்.தண்டபாணி வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் மாநாட்டு நிதியாக ரூ.4 லட்சத்தை பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றி னார். மூத்த தலைவர் ஜி.ரெத்தினவேலு, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், கே. சக்திவேல், பி.ராஜு, சி.முருகேசன், இரா.முத்துச் செல்வன், சி.ஆர்.ராஜா முகமது ஆகி யோர் கூட்டத்தில் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஹோச்சிமின் நன்றி கூறினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலா ளர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற் பட்டோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.