tamilnadu

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

சென்னை, ஜூன் 15 - “கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர்,  பார்வதிபுரம் கிராமம், சவேரியார் நகரைச் சேர்ந்த வின்சென்ட் அமல்ராஜ் அந்தோணி மகன் அப்டேல் டெவின் ரோஜர் (17) என்பவர் பார்வதிபுரம் கிராமத்திலுள்ள வெங்கலத்து ஏரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகர மான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனை யும் அடைந்தேன்.  மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தின ருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த  இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்  கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3  லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியி லிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.