சென்னை, ஜூன் 2- தமிழ்நாட்டில் 180 ஆண்டுகளை கடந்த மிக பாரம்பரியமிக்க கல்லூரிகளில் ஒன்று பச்சை யப்பன் கல்லூரி. ஏராளமான தலைவர்களையும் பல்துறை வல்லுநர்களையும் உருவாக்கிய பெருமை இந்த கல்லூரிக்கு உண்டு. இப்போது மோசமான நிர்வாகம் காரணமாக நிலைமை தலைகீழாக மாறி சீரழிந்து கொண்டிருக்கிறது. சென்னை பச்சையப்பன் கல்லூரி, சி. கந்த சாமி நாயுடு ஆடவர் கல்லூரி, செல்லம்மாள் மக ளிர் கல்லூரி, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் மற்றும் மகளிர் கல்லூரிகள், கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் ஆகிய 6 கல்லூரிகளும் 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமானது. ரூபாய் 35 ஆயிரம் கோடி சொத்து மதிப்பை கொண்ட இந்த கல்வி நிறுவனத்துக்கு சென்னை பாரிமுனை, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கட்டடங் கள், சீர்காழி அருகே தென்னங்குடி கிராமத்தில் 156 ஏக்கர், கடலூரில் 65 ஏக்கர், காஞ்சிபுரத்தில் 5 ஏக்கர் நிலமும் உள்ளன. இதனை நிர்வகிக்க 9 உறுப்பினர்கள் கொண்ட அறக்கட்டளை ஒன் றும் உள்ளது. கோடிக்கணக்கில் வருமானமும் சொத்தும் உள்ளதால் அறங்காவலர் பதவிக்கு நீயா? நானா? என்ற போட்டியில் தேர்தல் ஜனநாய கத்தை ‘பணநாயகம்’ தோற்கடித்து விடுகிறது. 2013 ஆம் ஆண்டில் தேர்வு செய்த நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் 2018ஆம் ஆண்டோடு முடிந்தும் இது வரைக்கும் தேர்தல் நடத்தப்பட வில்லை
ஊழல் சாம்ராஜ்யம்!
2013-18 ஐந்தாண்டுகளில் அறக்கட்டளை யை நிர்வகிக்க ஜெயச்சந்திரன் என்பவர் தலை மையிலான அறங்காவலர்கள் ஆர்.பிரபாகரன், எஸ். ஜெயச்சந்திரன், துரைமோகன், கே.ஹேம நாத், ராமநாதன் ஆகியோர் மீது பல்வேறு ஊழல் முறைகேடுகள் குறித்து புகார் எழுந்தன. இதில் முன்னாள் கல்வி அமைச்சர் பழனியப்பன் பெய ரும் அடிபட்டது. இவர்கள் அனைவருமே அன் றைக்கு தமிழ்நாட்டை ஆண்ட (அதிமுக) கட்சி யைச் சேர்ந்தவர்கள். வாடகைதாரர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு கடைகளின் வாடகையைக் குறைத்து அறக்கட்டளைக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ள னர். உதாரணத்திற்கு, சந்தை மதிப்பு அடிப்படை யில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வாடகை வசூ லிக்க வேண்டிய ஒரு கடைக்கு 1000 ரூபாய் மட்டுமே நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, காஞ்சிபுரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் விற்பனையில் பினாமி களைப் பயன்படுத்தி சுய லாபமும் அடைந்துள்ள னர். இப்படி ஏராளமான குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றில், மிக கொடுமை என்னவென்றால், தலா ரூ.15 லட்சம் முதல் 40 லட்சம் வரைக்கும் கையூட்டு பெற்றுக் கொண்டு 250 ஆசிரியர்களை நியமித்திருக்கிறார்கள். கடை நிலை ஊழி யர்கள் நியமனம் முதல் நடந்த இந்த ஊழல்- முறைகேடுகள் குறித்து முன்னாள் மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், பச்சையப்பன் அறக் கட்டளைக்கு நீதிபதி சண்முகத்தை இடைக்கால நிர்வாகியாக நியமித்து, புகார்களை விசாரிக்க வும் உத்தரவிட்டது.
நீதிபதி சண்முகம் நடத்திய விரிவான விசா ரணையில், 2014 முதல் 2016-க்குள் நிகழ்ந்த நிய மனங்களில் தகுதியானவர்களை புறம்தள்ளி விட்டு, தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள். தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள். முனைவர் பட்டம் பெறாதவர்கள், பல்கலைக் கழக மானியக்குழு வரையறுத்த தகுதி கூட இல்லாதவர்கள் குறுக்கு வழியில் வந்துள்ளனர். அதாவது, 234 பேர் நியமனத்தில் 60 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இத்துடன், கல்லூரியின் முதல்வர் நியமன மும் முறையற்று நடந்ததையும் கண்டுபிடித்து அந்த நியமனத்தையும் ரத்து செய்த நீதிபதி, “ஊழல் நடவடிக்கைகள் சமுதாயத்தில் புற்று நோய் போல பரவுகிறது, நேர்மையில்லாமல் நிய மிக்கப்பட்ட ஒருவர், நேர்மையாக செயல்படு வார் என எதிர்பார்க்க முடியாது” என்றும் குறிப் பிட்டிருக்கிறார். இவை மட்டுமல்ல, சென்னை கந்தசாமி கல்லூரியில் அம்மா அரங்கம் கட்டியதிலும் ஊழல் நடந்துள்ளது. இந்த கல்லூரிக்குச் சொந்த மான விடுதியில் தங்கிய மாணவர்கள் ஒவ் வொருவரும் கட்டிய ரூ. 9,500 டெபாசிட் தொகை திருப்பி தரப்படவில்லை. இது குறித்து மாண வர்கள் அளித்த புகாரை அடுத்து, நடந்த விசா ரணையில் விடுதிக் காப்பாளர், மேற்பார்வையா ளர் மற்றும் கல்லூரி ஊழியர்கள் கூட்டு கொள் ளையில் ரூ. 35 லட்சம் கையாடல் செய்ததும் நிரூ பணமானது.
திரும்பவும் நடந்த வழக்கு விசாரணை யின்போது, “உன்னத நோக்கத்திற்காக தொடங் கப்பட்ட இந்த கல்லூரியில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்கள் பாவம் இழைத்து வரு கின்றனர்” என வேதனைப்பட்ட நீதிபதி, “அறக் கட்டளை மீதான பொது மக்களின் நம்பிக் கைக்கும், புகழுக்கும் துரோகம் இழைக்கப் பட்டுள்ளது” எனவும் இடித்துரைத்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அளித்த தீர்ப்பில், அடுத்த பத்து வாரங்களுக்குள் தேர்தலை நடத்தி புதிதாக அறங்காவலர்களை தேர்வு செய்து பொறுப்பை ஒப்படைக்க வேண் டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். நீதி மன்றத்தின் கெடு முடிந்து மாதங்கள் பல கடந்தும் தேர்தல் நடக்கவில்லை. கல்வி வணிக மயமாகிவிட்ட இந்தக் காலச் சூழலில், தனியார் கல்லூரிகளில் இளங்கலை படிப்பு ஒரு பருவத்துக்கு கட்டணமாக ரூ.14,000 வசூலிக்கப்படுகிறது. இதைக் கட்ட முடியாத ஏழை மாணவர்களுக்கு 4500 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் பச்சையப்பன் கல்லூரி வரப்பிரசாத மாகும். இதை உணர்ந்த திமுக, எதிர்க்கட்சி வரி சையில் அமர்ந்திருந்த போது இப்பிரச்சனையை கையில் எடுத்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்து ஓராண்டை நிறைவு செய்த நிலையிலும், அறக்கட்டளையை அலங்கோலப்படுத்திய அதிமுக அரசு மீது நட வடிக்கை எடுப்பதில் வேகம் காட்டவில்லை என் கின்றனர் முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வ லர்கள். தனது வங்கிக் கணக்கில் 1,800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணத்தை வைத்திருந்த பச்சையப்பன் அறக்கட்டளையை நிதியை முந் தைய அதிமுக ஆட்சியின்போது அறங்காவல ராக இருந்தவர்களும் ஆளும் கட்சி நிர்வாகி களும் கூட்டு சேர்ந்து கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தி தங்களை வளப்படுத்திக் கொண்டதால் சீரழிந்து விழிப்பிதுங்கி நிற்கும் அறக்கட்ட ளைக்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப் படுமா? சொத்துக்களைக் சூறையாடி இழப்பை ஏற்படுத்திய அறங்காவலர்கள், போலிச் சான்று கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை நீதிமன் றத்திலும், மக்கள் மன்றத்திலும் தண்டனை பெற்று கொடுப்பாரா முதல்வர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- சி.ஸ்ரீராமுலு