நான், கண்புரை நோயால் பீடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து வெளியே வந்தபோது, தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற அதிர்ச்சியான செய்தி எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் அறுவை சிகிச்சை அரங்கில் இருப்பதைக் கேள்விப்பட்டு, என்னைப் பயணம் செய்ய வேண்டாம் என என்னைத் தடை செய்துவிட்டார்கள். எப்படியிருந்தாலும், புத்த தாவின் கடைசிப் பயணத்தில் நான் சேர்ந்திருக்க முடியாது. இது எப்போதும் என்னை வருத்தம் அடையச் செய்துகொண்டே இருக்கும்.
வங்கத்திற்கு அவர் ஆற்றிய அரும்பணிகள் குறித்து மதிப்பிட்டு ஏராளமான செய்திகள் இயல் பாகவே வெளிவந்துள்ளன. எனினும், இவற்றில் பெரும்பாலானவை அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பை மைய மாகக் கொண்டிருக்கின்றன. இது இயற்கையே யாகும். தோழர் ஜோதி பாசு, கடந்த காலத்தில் இருந்த தைப்போல இனி தன்னால் பங்களிக்க முடியாது என்று உணர்ந்ததால், தானாக முன்வந்து முத லமைச்சர் பதவியிலிருந்து விலகினார். ஜோதிபாசு அணிந்திருந்த புகழ்பெற்ற காலணிகளில் தோழர் புத்த தா அடி எடுத்து வைத்தார். இதுதொடர்பாக தோழர் புத்த தாவிடம் கேட்கப்பட்டபோது, அவ ருக்கே உரிய புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்து டன், “இந்தக் காலணிகள் எனக்கு மிகவும் பெரி யவை” என்று பதிலளித்தார்.
சித்தாந்தப் போராட்டம்
அவர் சுமார் பதினோரு ஆண்டுகள் முதலமைச்ச ராக இருந்த காலம் மிகவும் முக்கியமான கால மாகும். எனினும் அவர் முதலமைச்சராவதற்கு முன்னே நடைபெற்ற இரு முக்கிய அம்சங்கள் குறித்து நான் ஒருசிலவற்றைக் குறிப்பிட விரும்பு கிறேன். கடந்த நாற்பதாண்டு காலமாக எனக்கு அவருடன் இருந்த தொடர்பின் அடிப்படையில் இதனைக் கூறுகிறேன். 1960களின் பிற்பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் பல்வேறு சிந்தனைகள் முட்டி மோதிக் கொண்டிருந்த சமயத்தில் மார்க்சிசம் மற்றும் இடதுசாரி இயக்கத்தை நோக்கி ஈர்க்கப் பட்ட பிரகாசமான வங்க இளைஞர்களின் தலை முறையைச் சேர்ந்தவர் தோழர் புத்த தா. 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக் கப்பட்டது. அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருத்தல்வாதப் போக்கு குறித்து கடும் விவா தங்கள் நடைபெற்றன. பின்னர் வெகு விரை வாகவே, இடது அதிதீவிர (நக்சலைட்டுகள் உருவான) திரிபு (left adventurist deviation – the Naxalites) போக்கும் ஏற்பட்டது. இடதுசாரி இயக்கத்தில் கடும் சித்தாந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. காங்கிரஸ் கட்சியும் அதன் இளைஞர் அமைப்பும் மிகவும் மூர்க்கத்தன மாக மார்க்சிஸ்ட் கட்சியினரைக் குறிவைத்துத் தாக்கின. மார்க்சிச-லெனினிசத்தின் புரட்சிகர உள்ள டக்கத்தை உயர்த்திப்பிடித்திடும் இந்தப் போராட்டங்களை புத்த தாவும் அவருடன் இணைந்து மற்ற தோழர்களும் வீரத்துடன் நடத்தினார்கள். இவ்வாறாக இவர்கள் நடத்திய சித்தாந்தப் போராட் டங்களின் விளைவாக இவர்கள் உருக்குபோன்று மாறினார்கள்.
சர்வதேச அளவில் நடந்த மாற்றம்
அவசரநிலை முடிவுற்றபின் 1977இல் நடை பெற்ற தேர்தல்களில் வங்கத்திலும், கேரளாவிலும் திரிபுராவிலும் இடது முன்னணி அரசாங்கங்கள் அமைந்தன. அதுவரையிலும் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும், ஒருசில விதிவிலக்குகள் தவிர சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அங்கீகரிக்காது இருந்து வந்தன. 1977க்குப்பின்னர் இந்தியாவில் மிகவும் முன்னேறியதாகவும், பெரிய கம்யூனிஸ்ட் சேனை யைக் கொண்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறிய எதார்த்த நிலையைத் தெரிந்துகொண்ட பின் அவற்றின் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டது.
காம் சோமால் கருத்தரங்கில்...
அதன் விளைவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட பின்னர் முதன்முதலாக, சோவி யத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான காம்சோமால் (KOMSOMOL), சோவியத் யூனியனில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றிற்கு, இந்தியாவிலிருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உட்பட எட்டு மாணவர்-இளைஞர் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தது. அப்போது இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் அமைக்கப்படும் செயல்முறை யை மேற்கொண்டிருந்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை அமைப்ப தற்கான இணை அமைப்பாளர்களாக மேற்கு வங்க செயலாளராக இருந்த புத்தா தாவும், கேரளா வைச் சேர்ந்த இ.பி.ஜெயராஜனும் இருந்தார்கள். இவர்கள் இருவருடன் நேபாள் பட்டாச்சார்யாவும், இந்திய மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளராக இருந்த நானும் புத்தா தா தலைமையிலான தூதுக் குழுவில் சோவியத் யூனியனுக்கு சென்றோம். இந்திய-சோவியத் நட்புறவை வலுப்படுத்து வதற்காகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் கவனம் செலுத்துவதற்காகவும் நடைபெற்ற கருத்த ரங்களில் பங்கேற்றோம்.
அந்தக் கருத்தரங்கில் சோசலிஸ்ட் சீனாவின் செயல்பாடுகள் குறித்து ஒரு விவாதம் நடந்தது. இது தொடர்பாக நம் கட்சியின் கண்ணோட்டத் தின் அடிப்படையில் நாம் பதில் அளித்திட வேண்டி யது அவசியம் என்று நான் உணர்ந்தேன். இது தொடர்பாக நான் புத்தா தாவுடன் விவாதித்தேன். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். சோவியத் யூனி யன் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் நாம் எப்போதும் அழுத்தம் திருத்த மாகக் கூறிக்கொண்டிருக்கும் அம்சங்களை முன்வைத்து ஒரு குறிப்பு தயார் செய்தேன். சோவி யத் யூனியன் திருத்தல்வாதப் பாதையில் சென்று தவறுகள் இழைத்துள்ளபோதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த சமயத்திலும் அதனை சோச லிசம் அல்லாத நாடு என்று கருதியதில்லை. சோச லிசத்தின்கீழ் இந்தத் தவறுகளைச் சரிப்படுத்திட முடியும் என்று நாங்கள் கருதினோம். அதேபோன்றே, சீனா, சோவியத் யூனியனை ஒரு சமூக ஏகாதிபத்திய நாடு என்று முத்திரை குத்திய ஆழ மான திரிபுகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உறுதிபட எதிர்த்தோம். அப்போது சீனாவில் நடைபெற்ற பல அம்சங்கள் குறித்து நமக்கு விமர்சனங்கள் இருந்தபோதிலும், சீனா ஒரு சோச லிஸ்ட் நாடாகத் தொடர்ந்து நீடிக்கிறது என்பதில் நமக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. சீனக் கம்யூ னிஸ்ட் கட்சியால் அவை சரி செய்யப்பட்டுவிடும் என்று நாம் நம்பினோம். அந்த சமயத்தில்தான் சீனா வில் டெங்சியோபிங் தலைமையில் சீர்திருத்த செயல்முறைகள் தொடங்கப்பட்டிருந்தன.
உனது குறிப்பு, நீயே படி...
இதர பிரச்சனைகளுடன் இந்தப் பிரச்சனைகளை யும் அழுத்தமாகக் குறிப்பிட வேண்டும் என்று தீர்மானித்து, என்னுடைய குறிப்பை புத்தாவிடம் அடுத்த நாள் நடைபெறும் அமர்வில் படிப்பதற்காக கொடுத்தேன். அதற்கு அவர், “இதை நீ தானே தயார் செய்திருக்கிறாய். எனவே நீதான் இதைப் படிக்க வேண்டும்” என்று கூறியதுடன், அடுத்த நாள் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார். மார்க்சிசம்-லெனி னிசத்தின் புரட்சிகரக் கொள்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாகப் பின்பற்றி வருகிறது என்பதுதான் முக்கிய அம்சமாகும். அதனை இங்கே வலியுறுத்திக் கூறிட வேண்டும். ஆனால் இவ்வாறு நாம் பேசினால் அதனை ‘காம்சோமால்’ அமைப்போ அல்லது காங்கிரஸ் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தூதுக்குழு வினரோ ஏற்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்பதை சொல்லத் தேவையில்லை. இவ்வாறு நம் சித்தாந்தக் கொள்கைகளை தோழர் புத்தா தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார்.
கலாச்சார மேலாதிக்கம்
இரண்டாவதாக, இந்தியாவில் ஆளும் வர்க்கங்க ளின் ஆட்சிக்கு எந்தவொரு கடுமையான சவாலும் கலாச்சாரத் துறையின் போதுமான முக்கியத்துவம் இல்லாமல் வர முடியாது என்று புத்தா தா உறுதி யாக நம்பினார். ஆளும் வர்க்கங்களின் கருத்து களுக்கு எதிரான ஒரு மேலாதிக்கத்தை உருவாக்கு தல் மற்றும் மக்கள் மீதான அவர்களின் கட்டுப் பாட்டை நிலைநிறுத்துவதற்கான கிராம்சியின் கருத்தாக்கத்தை கலாச்சாரம் ஒரு முக்கிய அங்க மாகக் கொண்டிருக்க வேண்டும். ஆளும் வர்க்கங் கள் தங்கள் மேலாதிக்கத்தை தங்களுடைய கோட்டைகளிலிருந்து மட்டுமல்ல, அதனைச் சுற்றியுள்ள பரந்த வலைப்பின்னல்கள் மூலமாகவும் செயல்படுத்துகின்றன என்று கிராம்சி சுட்டிக்காட்டி இருந்தார். இந்த வலைப்பின்னல்கள் என்பவை பிரதானமாக மக்களின் சமூக உணர்வுகள், மதம் மற்றும் இதர தவறான எண்ணங்களைச் சார்ந்து உள்ளவைகளாகும். இவற்றை எதிர்-கலாச்சார மேலாதிக்கத்தின் மூலமாக எதிர்கொள்ள வேண்டி யது அவசியமாகும். (They need to be countered through a counter-cultural hegemonism) கிராம்சி கூறியது போன்று நம்முடைய கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவிட புத்தா தா கவனம் செலுத்தி னார். கலாச்சார ஆர்வலர்களின் மிக உயர்ந்த பரம்பரையில் இருந்து வந்த அவர், பழம்பெரும் புரட்சிக் கவிஞர் சுகந்த பட்டாச்சார்யாவின் மரு மகன் ஆவார். புத்தா தா இடது முன்னணி அர சாங்கத்தில் கலாச்சாரத் துறையின் அமைச்சராக இருந்தபோது இதைப் பின்பற்றினார்.
தில்லியில் கலாச்சார மையம்
அந்தக் காலங்களில் அவர் அமைச்சராக இருந்த சமயத்தில், அடிக்கடி நாங்கள் பேசிக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு தடவை, நான் புதுதில்லியில் வி.பி.ஹவுஸில் வசித்த சமயத்தில், அவர் என்னிடம், வங்க மாநில அரசின் சார்பாக தில்லியில் ஒரு கலாச்சார மையத்தைத் திறப்பது குறித்து விவா தித்துக் கொண்டிருந்தார். இந்தப் பணி யைச் செய்திடுவதற்காகப் பொருத்தமான நபர் எவரேனும் இருக்கிறார்களா என்று என்னிடம் வினவினார். அப்போது இது தொடர்பாக உத்தர் கண்ட் மாநிலத்தில் ஸ்ரீநகர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சஃப்தர் ஹஸ்மியிடம் பேசி, அவரிடம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வந்து, இந்த மையத்தைத் தொடங்கும்படி கேட்டுக் கொண்டோம். சஃப்தரும் வந்து குறிப்பிடத்தக்க அள விற்கு வேலை செய்தார். புத்தா தா மிக வும் திருப்திகொண்டு அவருக்கு ஆதரவு அளித்து வந்தார். அப்போது அவர், இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட மறக்கப்பட்ட மேதையான ரித்விக் கட்டக்கின் பணிக்கு புத்துயிர் அளித்தார். இறுதியாக, வங்கத்தில் பொருளாதார வளர்ச்சியின் ஒரு கட்டம் அநேகமாக நிறைவடைந்த நிலையில் புத்தா தா முதல்வர் பொறுப்பை ஏற்றார். மாநிலம் முழுவதும் நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் குத்தகைதாரர் பதிவுச் சட்டங்கள் கிட்டத் தட்ட வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டி ருந்தன. இதன் பொருள் விவசாயத்தில் உபரி தானிய உற்பத்தி பிரம்மாண்டமாக இருந்தது. இதன் காரணமாக கிராமப்புற வங்க மக்களின் சுகாதார நிலை மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை உண்ணும் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கிரா மப்புற இளைஞர்கள் வேளாண்மை சார்ந்த கொத்தடிமை நிலையிலிருந்து விடு விக்கப்பட்டிருந்தார்கள். இப்போது இந்த இளைஞர்கள் வேலை தேடிக் கொண்டி ருக்கின்றனர். எனவே, இவர்களுக்கு அதற் கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டி இருந்தது. இதற்கான ஒரே வழி தொழில்மயத்தை விரைவுபடுத்துவதே யாகும்.
தொழில் மய முயற்சி
ஆனால் தொழில்மயத்தை எப்படிக் கொண்டுவருவது என்பதே கேள்வி. இதற் காக அந்நிய மூலதனத்தின் உதவியைப் பெறுவதா, உள்நாட்டு ஏகபோக மூல தனத்தின் உதவியைப் பெறுவதா அல்லது வேளாண்மையில் கூட்டுறவுப் பண்ணை கள் மற்றும் இதர உற்பத்தி முறைகளை வளர்த்தெடுப்பதா என்பதே கேள்வி. மேலும் பல மாற்று யோசனைகளும் விவா திக்கப்பட்டன. சீனாவில் டெங்சியோ பிங்கின் சீர்திருத்தங்களின் கீழ் சீனா அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்ற கால மாகும் இது. மேலும் வெளிநாட்டு மூலதன மும், உள்நாட்டு ஏகபோக மூலதனமும் தங்கள் கொள்ளைலாப வேட்டைக்காக முதலீட்டு வாய்ப்புகளைத் தேடிக்கொண் டிருந்த காலமுமாகும் இது. தென்கிழக்கு ஆசியா மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்த எண்ணற்ற முன் மொழிவுகள் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போதுதான் டாட்டா நிறுவனத்திடமி ருந்து ஒரு கார் தொழிற்சாலை அமைப்ப தற்கான முன்மொழிவு முன்வந்தது. இது நடைமுறைச்சாத்தியமானது மற்றும் தொழில்மயம் நோக்கிச் செல்வதற்கான வலுவான பாதை என்றும் பார்க்கப் பட்டது. எனினும், இந்தத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்காக சிங்கூரில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நந்தி கிராம் போன்ற இடங்களில் தொழில்மயத் திற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணி கள் வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப் படுவதாக எதிர்க்கட்சியினரால் மக்கள் மத்தியில் அச்ச உணர்வுகள் ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
பொய்ப் பிரச்சாரமும் அனைத்து எதிர்ப்பாளர்களும்...
வலுக்கட்டாயமாக நிலம் கையகப் படுத்தப்படுகிறது என்பதற்கான அடிப்படை, உண்மையில் இல்லை. ஆயி னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வர்க்க மற்றும் சமூக அடித்தளத்தின் முது கெலும்பாக இருந்த கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் இத்தகைய உணர்வு மிக ஆழமான முறையில் உரு வாக்கப்பட்டது. நிலச் சீர்திருத்தங்கள் மூலமாகவும், குத்தகைதாரர் பதிவுச் சட்டம் மூலமாகவும் திரிணாமுல் காங்கிரசார் மற்றும் நிலப்பிரபுக்களிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட நிலங்களை வன்முறை வழிகளில் அவர்கள் மீண்டும் கைப்பற்ற முடிந்தது. அதே சமயத்தில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிப்போக்குகளும், அதனைத் தொடர்ந்து ஒன்றியத்தில் இருந்த ஐமுகூ அரசாங்கத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டதை அடுத்தும், காங்கிரசும், திரிணாமுல் காங்கி ரசும் ஒரு தேர்தல் முன்னணி ஏற்படுத் திக்கொண்டன. இதனுடன் ஆர்எஸ்எஸ்-இலிருந்து அதிதீவிர மாவோயிஸ்ட் அமைப்புகள் உட்பட, இடதுசாரி சக்தி களுக்கு எதிரான அனைத்து சக்திகளும், இணைந்துகொண்டன. இந்த மகா கூட்டணி புத்தா தாவின் அரசாங்கத்திற்கும் அதன் செயல்பாடுகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்தது.
புலம் பெயர் தொழிலாளர் படை
அவருடைய தொலைநோக்குப் பார்வை இன்றைய காலத்தின் கட்டாய மாகும். ஒப்பீட்டளவில் சிறந்த கல்வி யறிவு பெற்ற வங்காள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவது இன்றைய அவசியத் தேவையாகும். இன்றையதினம் வங்கத்தில் அத்தகைய வாய்ப்புகள் இல்லாத நிலையின் காரண மாகத்தான், புலம்பெயர்ந்த தொழிலா ளர்களின் எண்ணிக்கையில் வங்கா ளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ள னர். புத்தா தாவின் பதினோரு ஆண்டு கால முதல்வர் ஆட்சியின் கீழ் இன்னும் ஏராள மாக எழுத முடியும் மற்றும் எழுத வேண் டும். அவரால் உருவாக்கப்பட்ட ஒவ்வோர் அம்சம் குறித்தும் ஏராளமாக எழுத முடி யும். நிச்சயமாக வருங்காலங்களில் அதனைச் செய்திடுவோம். தோழர் புத்தா தாவிடம் விடைபெற்று அவருக்கு செவ்வ ணக்கம் செலுத்தும் அதே சமயத்தில், வங்காளத்துக்காக, குறிப்பாக வங்க இளைஞர்களுக்காக அவர் முன்வைத்த நிகழ்ச்சிநிரல், அவரது காலத்தில் இருந்த தைவிட இன்று மிகவும் பொருத்தமாக உள்ளது என்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி