30 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை எல்ஐசி ஊழியர்கள் வெளிநடப்பு - வேலைநிறுத்தம்
எல்ஐசி நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, வியாழனன்று (பிப்.20) நாடு முழுவதும் எல்ஐசி ஊழியர்கள் ஒரு மணி நேர வெளிநடப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். எல்ஐசி நிறுவனத்தில் மூன்றாம் பிரிவு மற்றும் நான்காம் பிரிவுகளில் பல்லா யிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடி யாக தொடங்க வேண்டும்; பெரும்பான்மை யான ஊழியர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ள ஏஐஐஇஏ–விற்கு சங்க அங்கீ காரம் வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, 1995 ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் (AIIEA) சார்பில், நாடு முழுவதும் இந்த போராட்டம் நடைபெற்றது. மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அலுவலக வாயில்களில் கோரிக்கைகளை முழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களி லும் போராட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு, சங்கத்தின் சென்னை பகுதி-1இன் தலைவர் கே. கிரிதர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. சென்னை பகுதி–1ன் பொதுச் செயலாளர் எஸ். ரமேஷ்குமார் சிறப்புரையாற்றினார். “எல்ஐசி நிறுவனத்தில் 40 கோடி பாலிசிதாரர்கள் உள்ளனர். ஆனால், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க போதிய ஊழியர்கள் இல்லை. 3 மற்றும் 4-ஆம் நிலை பணியிடங்களில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 5 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த போதும், அதற்கான பணிகளைத் தொடங்க மறுக்கின்றனர். 90 விழுக்காடு ஊழியர்களை உறுப்பினர்களாக கொண்ட ஏஐஐஇஏ-விற்கு சங்க அங்கீகாரம் தர மறுக் கின்றனர். இதனை கண்டித்து முதற்கட்ட மாக இந்த போராட்டம் நடைபெற்றது” என்றார்.