சென்னை, ஜூலை 5- அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை குறைத்து பணி நிரவல் கலந்தாய்வை பள்ளிக்கல்வி துறை நடத்துகிறது. பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்பு அவசிய மாக உள்ளது. விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் பயிற்சிக் களமாக பள்ளி மைதானங்கள் விளங்கி வரு கின்றன. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு வாரத்தில் 2 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அரசுப் பள்ளி களில் உடற்கல்விக்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் உடற்கல்வி ஆசிரியர்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. 250 முதல் 400 மாணவர்களுக்கு ஒரு உடற் கல்வி ஆசிரியர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 700 மாணவர்களுக்கு ஒரு உடற் கல்வி ஆசிரியர் என அரசு மாற்றி யுள்ளது. 1997ஆம் ஆண்டு அரசா ணையின்படி உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 250-ஐ தாண்டும்போது ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படுவார். ஒவ் வொரு கூடுதல் 300 மாணவர் களுக்கும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படவேண் டும். அதிகபட்சமாக 3 பேர் வரை நியமிக்கப்படுவார்கள். மேல் நிலைப் பள்ளிகளில் 400 மாண வர்களுக்கு ஒரு உடற்கல்வி இயக்குநர் நியமிக்கப்படுகிறார். ஆனால், அரசுப் பள்ளி களில் போதிய அளவு உடற்கல்வி ஆசிரியர்கள் நிய மிக்கப்படாமல் காலியாக இருந்த நிலையில் இந்த இடங் களுக்கு- பிற பள்ளிகளில்- கூடுத லாக உள்ள உடற்கல்வி ஆசிரி யர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது 700 மற்றும் அதற்கு குறைவான மாண வர்கள் கொண்ட உயர்நிலை மற் றும் மேல்நிலை பள்ளிகளுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணி யிடத்தை மட்டுமே அனுமதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 700-க்கும் அதிகமான மாண வர்கள் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் 2 உடற்கல்வி ஆசிரியர்கள், 701 முதல் 1500 வரை உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு உடற்கல்வி இயக்குனர் நிலை-2 என இரண்டு பேருக்கு அனுமதி. 1500-க்கும் மேல் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 2 உடற்கல்வி ஆசிரியர்கள் ஒரு உடற்கல்வி இயக்குனர் நிலை-2 அல்லது நிலை-1 என மொத்தம் 3 பேர் அனுமதிக்கப்படுவர் என்று உத்தரவிட்டுள்ளது. தற்போது மாணவர்களி டையே போதைப்பொருள், புகையிலை பயன்பாடு இருக்கின்ற நிலையில் உடற் கல்வி ஆசிரியர்களை குறைப்ப தன் மூலம் வகுப்புகள் குறையக் கூடும். இது மாணவர்களின் கவனச் சிதறலுக்கு வழிவகுக் கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.