tamilnadu

img

செங்கொடி இயக்கப் போராளி; மக்கள் மருத்துவர் தோழர் நாகரத்தினம் காலமானார்

சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்

முதுபெரும் தோழர் நாகரத்தினம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர்களில் ஒருவரும், மக்கள் மருத்துவமனையை நடத்தி வந்தவருமான தோழர் நாகரத்தினம் தன்னுடைய 92 ஆவது வயதில் கிருஷ்ணகிரியில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். தோழர் நாகரத்தினம் இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். இளம்வயதிலேயே தலைமறைவாக இருந்து இயக்கப் பணியாற்றியுள்ளார். கட்சியின் முதுபெரும் தோழர் டாக்டர் அண்ணாஜியின் துணைவியார் லலிதா மறைவிற்குப் பிறகு அண்ணாஜி அவர்களை திருமணம் செய்து கொண்டார். மக்கள் மருத்துவமனையில் மருத்துவர் அண்ணாஜியுடன் இணைந்து செவிலியர் பயிற்சி பெற்ற நாகரத்தினம் மருத்துவ சேவையாற்றினார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினார். டாக்டர் அண்ணாஜி மறைவிற்குப் பிறகு அவர் நடத்தி வந்த மக்கள் மருத்துவமனையை கட்சியிடம் ஒப்படைத்தார். கட்சி ஊழியர்களை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை செலுத்திய முதுபெரும் தோழர் நாகரத்தினம் மறைவு கட்சிக்கு பேரிழப்பாகும். கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தோழர் நாகரத்தினம் அண்ணாஜி அவர்களது உடல் ஓசூர் மருத்துவமனை மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடன் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மருத்துவர்கள் ஜோ, ஜெய் உள்ளிட்டோர்.

கிருஷ்ணகிரி, அக். 30 - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் மருத்துவரும் செங்கொடி இயக்கப் போராளியுமான தோழர் நாகரத்தினம் கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 92. தள்ளாத வயதிலும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காகத் தோழர்களுடன் இணைந்து பாடுபட்ட வர் நாகரத்தினம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்தில் பிளேக் நோய் பரவிய காலத்தில் மக்கள் பிணி போக்கிடவும்,  தர்மபுரி மாவட்டத் தில் வாச்சாத்தி கொடுமை நடந்த போது  பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி  கிடைத்திடவும் மார்க்சிஸ்ட் கட்சி யோடு நெருக்கமாய் இருந்து களப் போராளியாக செயல்பட்டவர் தோழர்  நாகரத்தினம்  என்பது குறிப்பிடத் தக்கது. 

உடல் தானம்

அவரது உடல் ஞாயிறன்று (அக்.30)  ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படும் விதமாக ஓசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு  தானமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் குடும்பத்தினரும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களும் கலந்துகொண்டனர். முன்னதாக மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்புச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர் முன்னி லை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், கட்சி யின் தர்மபுரி மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இளம் பரிதி, சேலம் மாவட்டச் செய லாளர் மேவை சண்முகராஜா, வேலூர்  மாவட்டச் செயலாளர் ஆர்.தயாநிதி,  தோழர் நாகரத்தினம் அண்ணாஜியுடன் நெருங்கிய நண்பரான மருத்துவர் நந்தகுமார், அண்ணாஜி- நாகரத்தினம் மகன் மருத்துவர் ஜோ, பேரன் மருத்துவர் ஜெய் ஆகியோரும் உரையாற்றினார்கள்.  தோழர் நாகரத்தினம் மறைவுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங் கல் தெரிவித்துள்ளனர்.  அண்ணாஜி குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களது ஆறுதல்களைத் தெரிவித்த னர்.