tamilnadu

img

அரசுப் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு: முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை,ஏப்.19-  அரசு பள்ளிகளில் செயல் பட்டு வரும் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான துவக்கவிழா திருவல்லிக்கேணியில் உள்ள  லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 19 அன்று  நடைபெற்றது.இதனை முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் ’நம் பள்ளி நம்  பெருமை’ என்ற திட்டத்தின் கீழ் விழிப்பு ணர்வு வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத் தார். அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரத்து 557  பள்ளிகளிலும் புதிய மேலாண்மை குழுக்க ளை மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஒரு தலை முறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். உங்களிடமிருந்து யாராலும் பிரிக்கமுடியாது. திருட முடியாத சொத்து என ஒன்று உண்டு என்றால் அது உங்களின் கல்வி மட்டும்தான். கல்வியை யாராலும் திருட முடியாது. அதை நீங்கள் மறந்து விடக்கூடாது.  மாணவச்செல்வங்களை வளர்த்தெடுப்பதை குறிக்கோளாக கொண்டு பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளிகள் செயல்படவேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் நமது அரசினுடைய நோக்கம், குறிக்கோள், லட்சியம்.  பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதிலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் இந்திய துணைக் கண்டத்திற்கே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலம்’ என்றார்.