பொதுமக்களுக்கு ரமலான் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி
ரமலானை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாபநாசம் அடுத்த இராஜகிரி முஸ்லிம் வெல்பேர் அசோசியேசன் சார்பில், ரமலானை முன்னிட்டு பொதுமக்களுக்கு 43 ஆவது ஆண்டாக, சிறப்பு அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி ராஜகிரி பெரியபள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வெல்பேர் அசோசியேசன் தலைவர் முகம்மது காசிம் தலைமை வகித்தார். செயலாளர் அன்வர் அலி, பொருளாளர் சபீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியபள்ளி தலைவர் யூசுப் அலி, அன்பளிப்பை பயனாளிகளுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், பெரிய பள்ளி செயலாளர் முகமது சுல்தான், பொருளாளர் முல்லா பாரூக், முத்தவல்லி அப்துல் ரவூப், பெரிய பள்ளி நிர்வாகிகள் பீர் முகம்மது உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 1,200 பேருக்கு புடவை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டினை வெல்பேர் அசோசியேசன் நிர்வாகிகள் மற்றும் பெரிய பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.