tamilnadu

முதியோர் மருத்துவமனையின் நோக்கம் நிறைவேறுமா?

சென்னை கிண்டியில் பிரம்மாண்ட மாக கட்டப்பட்டுள்ள தேசிய முதி யோர்நல மருத்துவமனை பிரதமர்  நரேந்திர மோடியால் கடந்த பிப்ரவரி மாதம்  திறந்து வைக்கப்பட்டது.   2020-ம் ஆண்டு கொரோனா பெருந் தொற்று ஏற்பட்டதால், தேவையை கருதி  தேசிய முதியோர் நல மருத்துவமனை, அரசு கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து  கடந்த 2022- ஆம் ஆண்டு மே மாதம்  கொரோனா மருத்துவமனை செயல்பாட் டில் இருந்து விடுவிக்கப்பட்டது. பின்னர், சீர மைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு திறக்கப் பட்டது.

கட்டண வார்டுகள்

தேசிய முதியோர் நல மருத்துவ மையத் தின் கட்டிடம் ஒன்றிய அரசு நிதியில் கட்டப்பட்டி ருந்தாலும், தமிழக அரசின் நிதி பங்களிப்போடு தான் மருத்துவமனை தொடங்கப்பட்டு உள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையின் நிர்வாகத்தின்கீழ் இயங்கும்  இம்மருத்துவமனையில் 40 தீவிர சிகிச்சை  படுக்கைகள் உட்பட 200 படுக்கைகள்  கொண்ட இந்த மருத்துவமனையில் 5  அறுவை சிகிச்சை அரங்கம், 20 கட்டண  வார்டுகள் உள்ளன. கட்டண அறையில்  உணவுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு ரூ. 900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மட்டுமில்லாமல் முது மையியல், முதியோர் மருத்துவம் சார்ந்த  ஆராய்ச்சிகளும் இந்த மருத்துவ மனையில் மேற் கொள்ளப்படுகின்றன. 

பல்வேறு சிகிச்சை பிரிவுகள்

புறநோயாளிகள் பிரிவு, அறிவுத் திறன் குறைபாடு சிகிச்சை, எலும்பு தன்மையை உறுதிப்படுத்த சிகிச்சை, எலும்பு தேய்மானம் சிகிச்சை, சிறுநீர் கட்டுப்படுத்த முடியாத முதியவர்களுக்கு சிகிச்சை, நாள்பட்ட வலி மற்றும் பிரச்ச னைகளுக்கான சிகிச்சை, இதய மருத்துவம், சிறுநீரக மருத்துவம்,மூளை நரம்பியல், மனநல மருத்துவம், இயன்முறை  மருத்துவம், புனர்வாழ்வு மருத்துவம், சித்தா,  யோகா, யுனானி, ஓமியோபதி மருத்துவ  சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் உள்ளன.  ஆங்கில மருத்துவம் தவிர மாற்று மருத்துவ சிகிச்சை அறைகள் அனைத்தும் பெரும்பாலும் பூட்டியே கிடக்கின்றன. மருத்துவர்கள் பற்றாக்குறை  தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களில் உள்ள முதியவர்களும் இந்த மருத்துவ மனையின் சேவையை பயன்படுத்தி  வருகிறார்கள். இந்த மருத்துவமனை திறக்கப் படும்போதே மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 276 பணியாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால்  தற்போது போதிய மருத்துவர்கள், செவிலி யர்கள் இல்லை. இருக்கும் மருத்துவர் களும் செவிலியர்களும் கடினமான உழைக்கி றார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு  ஏற்ப மருத்துவர்கள் செவிலியர்கள், கடைநிலை ஊழியர்கள் எண்ணிக்கை இல்லை.  

போதிய வசதியில்லாத ஸ்கேன் மையம்

அல்ட்ரா ஸ்கேன் மையத்தில் இரண்டு  அறைகள் இருந்தபோதிலும் ஒரு அறை  மட்டுமே செயல்படுகிறது. அதில் நீண்ட  வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. ஸ்கேன் எடுக்கப்போகும் போது துணி  மற்றும் உடலோடு எந்த உலோக பொருட்களும் எடுத்துச் செல்லக்கூடாது. உடை மாற்ற வும் இடமில்லை. ஸ்கேன் எடுக்க கூட்டத்திற்கு இடையே ஆண்கள் மேலாடை இன்றி நிற்கவேண்டிய நிலையுள்ளது. எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க  இந்த மருத்துவமனையில் போதிய அளவு வசதி இல்லாததால் நோயாளிகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, அல்லது கலைஞர்  நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனைக்கு  செல்லவேண்டியுள்ளது. ஒருபகுதி நோயாளி கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மடைமாற்றம் செய்யப்படுகின்றனர். ரத்த  அழுத்தம்  பரிசோதிக்கும் சாதனத்திற்கு பேட்டரி  இல்லை. அதனை செவிலியரே வாங்கி வர வேண்டியுள்ளது. ரத்தம் எடுப்பதற்கான டியூப்களுக்கு பற்றாக்குறை உள்ளது. நீரிழிவு நோயை பரிசோதனை செய்ய மாதிரி சேகரிக்கும் டப்பாக்கள் பற்றாகுறை என  கூறி சிறுநீர் குறித்தான பரிசோதனைகள் ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப்போவதும் உண்டு. ராஜீவ்காந்தி, ஸ்டான்லி  அரசு பொது மருத்துவமனை நோயாளிகளின் வார்டுக்கு வந்து செவிலியர்கள் ரத்தம் எடுத்துச் செல்வார்கள். இங்கு ரத்தம் எடுத்துவிட்டு  அதை நோயாளியின் உதவியாளரிடம் கொடுத்து ரத்த பரிசோதனை மையத்திற்கு  எடுத்துச் செல்லுமாறு கூறுகிறார்கள்.

வீல் சேர் இல்லை

இந்த மருத்துவமனை முதியோருக்கு  ஏற்படும் உடல் நல பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க துவங்கப்பட்டுள்ள நிலையில் மருத்து வமனைக்கு நடக்கக்கூட முடியாமல் வரும்  நோயாளிகளுக்கும் பரிசோதனைக்கு நோயா ளிகளை அழைத்துச் செல்லவும் போதிய வீல் சேர்கள் இல்லை. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி யுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை 

வார்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவு கிறது. லாரி வந்து நிலத்தடி நீர்தேக்க தொட்டி யில் தண்ணீர் நிரப்பும் வரை நோயாளிகளும் அவர்களது உதவியாளர்களும் இயற்கை உபாதை கழிப்பது உள்பட அவசர தேவைக்கு  காத்திருக்கவேண்டியுள்ளது. நோயாளிகள் வெந்நீர் குடிக்கவேண்டுமானால் அதற்கான  வசதி செய்து தரப்படவில்லை. குளியல் அறை யிலும் 3 குழாய்கள் இருந்தாலும் சாதாரண  தண்ணீர்தான் வருகிறது. சுடு தண்ணீர் வருவதே இல்லை என நோயாளிகள் புகார் தெரிவித்தனர். 

நோயாளி உதவியாளர்  அமர இருக்கை இல்லை

நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு  சிறப்பாக இருந்தாலும் குறித்தநேரத்திற்கு தரப்படுவதில்லை, நோயாளிகளின் உதவியா ளர்கள் உட்கார இருக்கைகள் கிடையாது என நோயாளிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள  உணவகம் சரியில்லை. அந்த உண வகத்தில் பொங்கல், இட்லி, சிங்கிள்ரைஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் தோசை, சப்பாத்தி, இடியாப்பம் கிடைப்ப தில்லை. வாங்கும் பொருட்களுக்குபில் வழங்குவதில்லை. மேஜைகளில் சாப்பிட்ட பின்னர் உடனுக்குடன் சுத்தம் செய்யப்படுவதில்லை. கேண்டீன் ஊழியர் என்று ஒருவர் மட்டுமே இருக்கிறார். அவர் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களிடம் மென்மையாக நடந்து கொள்வதில்லை என புகார் எழுகிறது. கார்டியாலஜி மருத்துவர் தான் எக்கோ  எடுக்கும் பணியையும் சேர்த்து பார்க்கிறார்.  இதயத்திற்கு ரத்தத்தை  எடுத்துச்செல்லும்  குழாயில் அடைப்பு இருந்தால்அதை நீக்க இதே மருத்துவமனையில் ஆஞ்சியோ செய்யப்படுவதில்லை. சென்ட்ரல் அருகே  உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு செல்லுமாறு கூறுகிறார்கள். உட்புற நோயாளி ஒரு சிறப்பு மருத்து வரை சந்திக்கவேண்டும் என்றால் குறிப்பாக  நரம்பியல், இதயவியல் மருத்துவரிடம் சிகிச்சைபெற வேண்டுமானால் காலை  7.30 மணிக்கு பதிவு செய்யவேண்டும். ஆனால் மருத்துவர்கள் 9 மணிக்கு தான் வரு கிறார். இதனால் மூத்த குடிமக்கள் 2 மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.   பொது வார்டுகளில் உள்ள  நோயா ளிகளின் உதவியாளர்கள் உறவினர்கள் அமரவோ ஓய்வெடுக்கவோ தனியாக  இடவசதி செய்து தரப்படவில்லை. இதனால்  அவர்கள் வராண்டாவில் படுக்கவேண்டி யுள்ளது. அவசர சிகிக்சைப்பிரிவு வெளியே  பலர் சோகத்துடன் தரையில் படுத்துக்கிடக் கிறார்கள்.  எனவே முதியோர் நலன் காக்க  துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை அந்த  நோக்கத்தை முழுமையாக எட்டும் வகை யில் தற்போதுள்ள குறைகளை களைய  மாநில அரசு உடனடியாக நடவடிக்கை  எடுக்கவேண்டும் என்று நோயாளிகளும்  அவர்களது உறவினர்களும் கோரிக்கை  விடுத்துள்ளனர்.          - ந.நி