விவசாயிகளிடமிருந்து மாங்கனிகளை உடனடியாகக் கொள்முதல் செய்க!
மாம்பழக்கூழ் உற்பத்தி ஆலைகளுக்கு அரசு அறிவுறுத்தல்
சென்னை, ஜூன் 18 - மாம்பழக்கூழ் உற்பத்தி ஆலைகள், விவசாயிகளிடமிருந்து மாங்கனிகளை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண் டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி யுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டி ருக்கும் செய்திக்குறிப்பு வருமாறு: தமிழ்நாட்டில் சுமார் 1.46 லட்சம் ஏக்கரில், ‘மா சாகுபடி’ மேற்கொள்ளப்பட்டு ஆண்டுக்கு 9.5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி, திண்டுக் கல், தருமபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத் தூர், சேலம், வேலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மா சாகு படி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் பருவநிலை மா உற்பத்திக்கு சாதகமாக அமைந்ததால், வழக்கமாக ஏக்கருக்கு 5 முதல் 6 மெட்ரிக் டன் வரை கிடைக்கும் மகசூல் இந்த ஆண்டு 8 மெட்ரிக் டன்னுக்கும் மேலாக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், மாம்பழக்கூழ் தயாரிப்புக்கு ஏற்ற பெங்களூரா வகையை பதப்படுத்தும் நிறுவனங்கள் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்ற னர். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி யர், மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விலை நிர்ணயித்த பின்னரும், மாம்பழக்கூழ் உற்பத்தியாளர்கள் குறைந்த விலையில் கொள்முதல் செய்து வருகின்ற னர். இதனால், மா பதப்படுத்தும் நிறுவ னங்களுடன், வேளாண் உற்பத்தி ஆணை யர் மற்றும் அரசு செயலாளர் தலைமையில், தோட்டக்கலைத் துறை இயக்குநர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திரு வள்ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர், மதுரை ஆகிய மாவட்ட தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் ஜூன் 16 அன்று ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில், மா பதப்படுத்தும் தொழிற் சாலைகளின், கடந்த ஆண்டின் மாம்பழக் கூழ் கையிருப்பு அதிகமாக உள்ளதால் பதப் படுத்தும் நிறுவனங்களுக்கு தேவை குறை வாக உள்ளதாகவும், மா உற்பத்தி அதிகமாக இருப்பதால் விவசாயிகளிடமிருந்து உரிய விலைக்கு மா கொள்முதல் செய்ய இய லாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டது. ஜூன் 20-ஆம் தேதிக்கு பிறகு, மாம்பழத் தில் இனிப்புத் தன்மை 20° பிரிக்ஸ் அளவில் இருக்கும் என்பதால் அப்போது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வ தாக பதப்படுத்தும் நிறுவனங்கள் தெரிவித்தன. மா உற்பத்தி செய்யும் விவசாயிகள் நலன் கருதி, மா பதப்படுத்தும் நிறுவனங்கள் மாம்பழக் கூழ் தயாரிக்கும் பணிகளை உடன டியாக தொடங்கவும், மாம்பழக்கூழ் தயாரிக்க பெங்களூரா வகையை நியாயமான விலை யில் உடனடியாக உழவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யவும் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் கேட்டுக் கொண்டார். இதற்கு மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறு வனங்கள் ஒப்புதல் அளித்து மாம்பழக்கூழ் உற்பத்தியை தற்போது தொடங்கியுள்ளது. இவ்வாறு தெரிவித்திருக்கிறது.