சமீபத்தில் சென்னை தேனாம்பேட்டையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கூட்ட ரங்கில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கட்டணத் தொகையாக ரூ.1,263 கோ டிக்கணக்கான காசோலை யுனை டெட் இந்தியா காப்பீட்டு நிறுவ னத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையேற்றார். மருத்துவத்துறை அமைச்ச ரின் தகவல்படி, முதல்வரின் மருத் துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 48 லட்சத்து 57 ஆயி ரத்து 459 பயனாளிகளுக்கு பிரீமிய தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது 2024 ஜனவரி 11 ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 10 ஆம் தேதி வரை செல்லுபடி யாகும். ரூ.5 லட்சம் வரை மருத்துவ உத விகள் கிடைக்கக்கூடிய இந்தக் காப் பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்தி ற்கு அரசு பிரீமிய தொகையாக ரூ.849 செலுத்துகிறது. 2009 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 8 ஆம் தேதி வரை மொத்தம் 1.46 கோடி பேர் இத் திட்டத்தின் பயனைப் பெற்றுள்ள னர் என்றும் அமைச்சர் தெரி வித்தார். மேலும், இப்பயனாளிகளின் மருத்துவ சிகிச்சைக்காக மொத்தம் ரூ.13,391 கோடி செலவிடப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 942 அரசு மருத்துவமனைகள் மற்றும் 1,215 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 2,157 மருத்துவ மனைகள் இணைக்கப்பட்டு செயல் பட்டு வருகின்றன. தடைபட்டுள்ள காப்பீட்டு தொழில்நுட்பம் ஆனால், தற்பொழுதுள்ள நிலைமையில் பல்வேறு தரப்பின ரும் இத்திட்டத்தின் குறைபாடுக ளைப் பற்றி கவலை தெரிவிக்கின்ற னர். குறிப்பாக, ஆண்டின் கடைசி மாதத்தில் மற்றும் புதிய ஆண்டின் முதல் மாதத்தில் காப்பீட்டுத் தொழில்நுட்பம் தடைபட்டுள்ளமை பெரிய சிக்கலாக உள்ளது. சில மருத்துவமனைகள் தொழில்நுட்ப வசதி அல்லது சர்வர் பிரச்சனை எனக் கூறி நோயாளி களை திருப்பி அனுப்பிவிடுகின் றன. மேலும், நோயாளிகள் சொந்தச் செலவில் சிகிச்சை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப் பட்டு, பல நோயாளிகள் தங்கள் உயி ரையும் உடல் உறுப்புகளையும் இழக்கும் கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் பிரதமர் மருத் துவக்காப்பீடு திட்டமும் தற்பொ ழுது ஐசியூவில் கோமா நிலையில் உள்ளது. இந்நிலையில் தமிழக மருத்துவக்காப்பீடு திட்டத்தின் குறைபாடுகளை உடனடியாகச் சீரமைக்கும் வகையில் தமிழக முதல்வர் தலையிட வேண்டிய கட்டாய அவசியம் உள்ளது. மக்கள் நலனுக்காகப் பரிந்து ரைக்கப்பட்ட இந்தத் திட்டம் தற்பொழுது மக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நோயாளிகளுக்கு தடையின்றி மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் மற்றும் முழு மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் மக்கள் நலனுக்கு ஏற்ற வகையில் மறு சீரமைக்கப்பட வேண்டும். ஐ.வி.நாகராஜன்