தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 228 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக 89 சந்தாக்களுக்கான தொகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகத்திடம் ஞாயிறன்று வழங்கப்பட்டது. கடத்தூரில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ.அருச்சுணன், ஆர்.மல்லிகா, வட்டச் செயலாளர்கள் தி.வ.தனுசன், ஏ.குமார், கே.தங்கராஜ் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.