அணுகு சாலை அமைக்க வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஏப்.27- திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகு சாலை அமைக்க நீதிமன்ற உத்தரவுப்படி நிலம் கையகப்படுத்தும் பணியை உடனே துவங்க வேண்டும். தமிழக அரசு சாலையின் அகலத்தை தற்போது 45 மீட்டரில் இருந்து 33 மீட்டராக குறைத்து மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அணுகு சாலை மீட்பு கூட்டமைப்பு, குடியிருப்போர் நலச் சங்கங்கள் சார்பில் ஞாயிறன்று அரியமங்கலத்தில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் காட்டூர் பகுதிச் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, கார்த்திகேயன், மணிமாறன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.சி. பாண்டி யன், மாவட்டப் பொருளாளர் தனபால், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் முஹமதுல்லா, 38 ஆவது வார்டு கிளைத் தலைவர் நாசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய நகர செயலாளர் பால கிருஷ்ணன், மாநில பொறியாளர் அணிச் செயலாளர் சந்திரசேகர், அணுகு சாலை மீட்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி வேல் ஆகியோர் பேசினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.