tamilnadu

img

வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஏப்.22-  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், வக்பு வாரிய திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், இச்சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வற்புறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைச் செயலாளர் மூசா, தமுமுக மாநிலச் செயலாளர் முபாரக், பல்வேறு இஸ்லாமிய அமைப்பு மற்றும் முற்போக்கு அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். 150-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.