பேராசிரியர் வ.பொன் னுராஜ் எழுதிய, “மார்க்சின் மறுவார்ப்பு எலி னார்” எனும் நூல் மார்க்சின் இளைய மகள் எலினார் குறித்து தமிழில் வெளிவந்துள்ள முதல் நூல் எனும் பெருமைக்குரியது. எலினாரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு என குறிப் பிடப்பட்டு இருந்தாலும் எலினாரை முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் ஏராளமான செய்திகள், தக வல்கள் கொட்டிக் கிடக்கிறது நூல் முழுவதும். மார்க்சின் அரசியல் வாழ்வு மற்றும் குடும்ப வாழ்வு குறித்து தமிழில் பல நூல்கள் வெளிவந்திருக்கிறது. ஏங்கெல்ஸ், லெனின் எழுதிய கட்டுரைகள் முதற்கொண்டு, மார்க்ஸ் ஏங்கெல்ஸ் நினைவுக் குறிப்புகள் உள்ளிட்டு ஏராள மான படைப்புகள் காணக் கிடைக்கின்றன. அதில் மார்க்சின் குழந்தைகள் ஜென்னிசன், லாரா, எலினார் குறித்தெல்லாம் சில குறிப்புகளை மட்டுமே அறிந்தி ருப்போம். எட்வர்டு மரணத் தைக் கூட ஜென்னியின் வரி களில் மட்டுமே அறிந்திருப் போம். ஆனால், ஜென்னிசன் என்னைப் போல, ஆனால் எலி னார் நான் தான் என்று மார்க்ஸ் குறிப்பிட்ட எலினாரை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நாம் அறியாத எலினாரை ரத்த மும் சதையுமாக நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக் கிறார் பேராசிரியர் வ. பொன்னுராஜ், மூன்று மகள் கள் என்ற போதிலும் மார்க்சுக்கு எலினார் மீது தான் அலாதிப் பிரியம். காரணம், மார்க்ஸ் பேரன்பு கொண்டிருந்த எட்கர் இறந்த பிறகு பிறந்ததால் அத்தனை அன்பையும் எலி னார் மீது காட்டினார் மார்க்ஸ். தனது அரசியல் வாரிசு என்றும் கருதினார். எலினாரும் இளம் பருவத்திலேயே ஒரு மார்க் சிஸ்ட்டாக பரிணமித்தார்.
மார்க்சிய பேராளியாக...
தனது சொத்தில் ஒரு பங்கை எலினாருக்கு கொடுத்தார் என் பது மட்டும் அல்ல, எனது சாம்பலை எலினார் தான் கரைக்க வேண்டும் என்றும் ஏங்கெல்ஸ் விரும்பியதும், ஏங்கெல்ஸ் எனது இன் னொரு தகப்பன் என எலினார் ஏற்றதும் மனம் நெகிழும் காட்சி கள். எலினார் பிறக்கையில் தான் மூலதனம் நூலை எழுத துவங்குகிறார் மார்க்ஸ். எலி னாரின் அசாத்தியமான அர சியல் பணிகள், இதுவரை யிலும் நாமறியாத ஒன்று. மார்க்சின் மகளாக மட்டும் அல்ல, ஒரு மார்க்சியப் போரா ளியாக அவர் வாழ்ந்துள்ளார். ஆனால், அவர் 43 வயதில் மரணமடைந்த துயரத்தை என்னவென்று சொல்ல. பெர்னாட்ஷாவின் நெருங்கிய நண்பராக எலினார் விளங்கிய செய்தியும் வருகிறது. வறுமையில் உழன்ற மார்க்சின் வீட்டில் பலவற்றுக் கும் பஞ்சம் இருந்த போதிலும் புத்தகங்களுக்கு பஞ்சம் இருந்ததில்லை. புத்தகங்களை சுமந்த அலமாரிகளின் அளவு சில அடிகளாக இருக்கலாம். ஆனால் அப்புத்தகங்கள் சுமந்த கதைகளோ ஆயிர மாயிரம் என்கிறார் எலினார். 1864ல் முதல் அகிலம் உருவா னது. பாட்டாளி வர்க்க சர்வ தேசியம் என்கிற கோட்பாட் டோடு எலினார் வளர்ந்தார் அவைகள் குறித்தான புரி தல்களோடு. மார்க்சிடமிருந்து அரசியல், பொருளாதாரம், சமூக வரலாறு குறித்தெல்லாம் கற்றுணர்ந்தார். பிரிட்டன் அருங்காட்சிய நூலகத்தில் அதிக நேரங்களை செலவழித்த வாசகர்களில் அவர் முதன்மை யானவர். நூலகத்தின் வார விடுமுறை நாட்களில் கூட அவருக்கு சிறப்பு அனுமதி உண்டு. அயர்லாந்து விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டார். ஆதரவு இயக்கங் களில் கலந்து கொண்டார்.
பல போராட்டங்களை முன்னெடுத்தவர்...
உலகின் முதல் பாட்டாளி வர்க்கப் புரட்சியான பாரீஸ் கம்யூன் எழுச்சி 1871இல் நடை பெற்றது. பாரீஸ் கம்யூனுக்கு ஆதரவாக செயல்பட்டது மட்டு மின்றி, பாரீஸ் கம்யூனில் பெண்களின் பங்கு பற்றி உலகுக்கு பறை சாற்றியவர் எலினார் மார்க்ஸ் தான். பெண்கள் பங்கு வகிக்காமல் பாட்டாளி வர்க்க புரட்சி வெற்றி பெறாது என்பதை நிறுவி னார். இங்கிலாந்தில் பற்பல தொழிற்சங்கங்களை எலினார் உருவாக்கி, எட்டு மணி நேர வேலைக்காக பல போராட்டங் களை முன்னெடுத்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் சோசலிச இயக்க தலைவர் களில் ஒருவராக எலினார் திகழ்ந்துள்ளார். மார்க்சின் வாழ்க்கை வரலாற்று நூல் களுக்கு எல்லாம் ஆதாரமாக திகழ்வது எலினார் எழுதிய கட்டுரைகள் தான். எலினார் ஏராளமான நூல்களை எழுதி உள்ளார். பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தனிச் சொத்து, குடும்பம் மற்றும் அரசு ஆகியவற்றின் தோற்றம் நூலை எழுதும்போது ஏங்கெல் சோடு விவாதித்துள்ளார். இந்த நூலில் உள்ள கருத்துக்களை நடைமுறைப்படுத்த இதோ ஒரு பெண் இருக்கிறாள் என ஏங்கெல்சால் புகழப்பட்டி ருக்கிறார். எலினார் ஒரு மிகச்சிறந்த நாடகவியலாளர். ஷேக்ஸ்பியரின் தாக்கம் அவ ரை அவ்வாறு உருவாக்கியது. வாழ்த்துரையில் தோழர் டி.கே.ரங்கராஜன், எலினார் மார்க்ஸ் குறித்து 2020ல் இத்தாலியில் ஒரு திரைப்படம் வெளிவந்த செய்தியை குறிப்பி டும் அவர் மேலும் எழுதுகிறார், காரல் மார்க்சின் புரட்சிகர வாழ்வியலை உள்வாங்கி, தந்தை தத்துவம் என்றால் மகளோ நடைமுறை என்று சொல்லும் அளவிற்கு தொழி லாளர் வர்க்க இயக்கத்திற்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மார்க்சின் இளைய மகள் எலினார் குறித்து தமிழில் போதிய அளவு பதிவு செய்யப் படவில்லை, அந்த குறை பாட்டை போக்கும் வகையில் உயிர் ததும்பும் வார்த்தை களால் இந்த நூல் எழுதப் பட்டுள்ளது என்கிறார்.
பொதுவுடமை சித்தாந்த த்தை தந்தை மார்க்சிடமிருந் தும் தனது இரண்டாம் தந்தை ஏங்கெல்சிடமிருந்தும் வரித்துக் கொண்ட கார ணத்தால், எனக்கு இரண்டு மூளைகள் உண்டு என்று இளம் வயதிலேயே கொக்கரித்தவள் என்றும், பெர்னாட்ஷா, வில்லியம் மோரிஸ் போன்ற அறிஞர்களோடும் வாழ்நாள் முழுக்க நட்புக் கொண்டிருந்த அறிவு அரக்கி அவள் என்று அணிந்துரையில் பேரா சேவி யர் அமல்ராஜ் குறிப்பிடுகிறார். 400க்கும் அதிக பக்கங்களைக் கொண்ட ரேச்சல் ஹோம்ஸ் எழுதிய எலினார் மார்க்ஸ், யுவோன் காப் எழுதிய எலினார் மார்க்ஸ் ஒரு வாழ்க்கை வர லாறு மற்றும் பல இணைய தள குறிப்புகளை வாசித்த றிந்து, எழுபது பக்கங்களில் அதன் சாரத்தை சற்றும் சுவை குன்றாமல் நமக்கு படைத் திருக்கிறார் நூலாசிரியர். பேராசிரியர் பொன்னுராஜ், ஒரு வேதியியல் பேராசிரியர். ஆனால் அவரிடம் தமிழ் செல்லப் பிள்ளை போல தவழ்ந்து விளையாடுகிறது. உதாரணத்திற்கு ஒரு வரி, அவனுக்காக நாள் முழுவதும் காத்திருந்தாள் காதாலால் வீழ்த்தப்பட்ட அக்காரிகை. ஆதார நூல்கள் இருப்பினும், அரிய படைப்பாக மிளிர்கிறது.
“மார்க்சின் மறுவார்ப்பு எலினார்”
ஆசிரியர் : பேராசிரியர் வ.பொன்னுராஜ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை ரூ 80/-