tamilnadu

கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது: அ.வெண்ணிலா, மீனா கந்தசாமி தேர்வு

சென்னை, டிச. 30- ஜனவரி 6 முதல் 23 வரை நந்தனம்  ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும்  45ஆவது சென்னைப் புத்தகக் காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து  வைக்கிறார். புத்தகக் காட்சிக்கான அழைப்பி தழை தலைமைச் செயலகத்தில் முதல்வரை நேரில் சந்தித்து பபாசியின் தலைவர் வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன், பொருளாளர் குமரன், துணைத்தலைவர் மயிலவேலன், இணைச் செயலாளர் எஸ்.பழனி, துணை இணைச் செயலாளர் சுப்பிரமணி யன் ஆகியோர் வழங்கினர்.

விருதுகள்

புத்தகக் காட்சி தொடக்கவிழா நிகழ் வில் 2022ஆம் ஆண்டிற்கான முத்தமிழறி ஞர் மு.கருணாநிதி பொற்கிழி விரு திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்க ளுக்கும், சிறந்த பதிப்பாளர்களுக்கும் முதல்வர் விருதுகளை வழங்குகிறார். உரைநடைக்கு சமஸ், நாடகத்திற்கு பிரசன்னா ராமசாமி, கவிதைக்கு ஆசைத்தம்பி (ஆசை), புதினத்திற்கு அ.வெண்ணிலா, பிறமொழிக்கு பால் சக்கரியா, ஆங்கிலத்திற்கு மீனா  கந்தசாமி ஆகியோருக்கு முத்தமிழறி ஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி  விருது வழங்கப்படுகிறது. சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச்  செம்மல் க.கணபதி விருது ச.மெ.மீனாட்சி சோமசுந்தரத்திற்கும் (மணி வாசகர் பதிப்பகம்), சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது நாதம் கீதம் புக் செல்லர்சுக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர் அழ.வள்ளியப்பா விருது திருவை பாபுவுக்கும், றந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது முனைவர் தேவிராவுக்கும், சிறந்த பெண் எழுத்தா ளருக்கான பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது பாரதி பாஸ் கருக்கும், சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது கு.வை.பாலசுப்பிரமணியனுக்கும் வழங்கப்பட உள்ளது.