கண்ணூர், ஏப்.8- மதவெறி சக்திகளை எதிர்த்து நடத்தப்படும் மதச்சார்பின்மைக்கான போராட்டத்தில் காங்கி ரஸ் கட்சி உறுதியுடன் நிற்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் வேண்டுகோள் விடுத்தார். கட்சியின் 23வது அகில இந்திய மாநாட்டை யொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மதச்சார்பின்மை பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்று பேசிய போது மேற்கண்டவாறு பிரகாஷ்காரத் குறிப் பிட்டார். அவர் மேலும் பேசியதாவது: மதவெறியை எதிர்த்து நடத்தப்படும் போராட் டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளோடு காங்கிரஸ் கட்சி இணைந்து வந்ததுள்ளது. தேசியக் கட்சி என்ற முறையில் கட்சியின் மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப் பட்ட இக்கருத்தங்கில் காங்கிரஸ் சார்பில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் வர வில்லை. தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சி என்று அழைத்துக் கொள்ளும் காங்கிரஸ், கேரளத்தின் அரசியல் உள்நோக்கத்திற்காக இதை பயன் படுத்துவது சரியானதல்ல. வகுப்புவாத சக்தி களை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களில் இத்தகைய அரசியல் அணுகுமுறை சரியான தல்ல. அது மதச்சார்பின்மைக்கான போராட் டத்தை பலவீனப்படுத்தும்.
மதச்சார்பின்மை என்றகோட்பாடு ஒரு தனி யான விசயமல்ல. அது இந்திய அரசியல் வர லாற்றோடு பின்னிப் பிணைந்த ஒன்று. நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் சாதி, மத, இன,மொழி ஆகியவைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராடிப் பெற்றதே இந்திய சுதந்திரம். பல்வேறுபட்ட மக்க ளின் ஒற்றுமையால் உருவான சுதந்திர இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற அடித்தளத்தின் அடிப்படையிலேயே 1950ல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை வலியுறுத்துகிறது. இந்திய அரசு எந்தவொரு மதத்திற்குச் சொந்த மானதாக இருக்கக்கூடாது எந்த மதத்தின் மீது சார்பு நிலை இருக்கக்கூடாது என்பதை அரசியல் சட்டம் வகுத்துள்ளது. இந்திய மக்களுக்கு அரசி யலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் தற்போது சீர்குலைக்கப் பட்டு வருகிறது. படிப்படியாக அரசியல் சட்டத் தின் அடித்தளம் தகர்க்கப்பட்டு வருகிறது.
மதச்சார்பின்மையை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். ஜனநாயகமும் கூட்டாட்சியும் பாது காக்கப்பட வேண்டுமானால் மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து மக்களும் சமமானவர்களே என்று அரசியல் சட்டம் சொல் வதை தகர்த்திடும் போது ஜனநாயகம் மட்டும் எப்படி பாதுகாப்பாக இருக்கும்? இத்தகைய அம் சங்களில் இருந்தே, அரசாங்கம் மத விசயங்களி லிருந்து விலகி நிற்க வேண்டும், மதச்சார்பற்ற அரசாக இருக்க வேண்டும் என்பதை அரசியல மைப்புச் சட்டம் சொல்கிறது.
சமரசம் கூடாது
வகுப்புவாத சக்திகளின் நடவடிக்கைகளை இந்திய பெருமுதலாளிகள் ஆதரிக்கிறார்கள். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை களை அமலாக்குவதற்கு வகுப்புவாத சக்தி கள் உறுதுணையாக இருக்கின்றன. பொருளா தாரக் கொள்கையின் மீதான மக்களின் கோபங்க ளை வகுப்புவாத சக்திகள் திசைதிருப்புகின்றன. இவ்விரு சக்திகளும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்றன. தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் வகுப்புவாத சக்திகளை எதிர்த்து உறுதியுடன் போராட வேண்டும். அவற்றோடு சமரசத்தை செய்து கொள்கிறது. இந்த மென்மையான அனுகு முறை சரியானதல்ல. சமரசமற்ற போராட்டம் மட்டுமே வகுப்புவாதிகளை தனிமைப்படுத்தும். பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அமலாக்க சட்டமன்றங்களில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் கேரளத்தின் இடதுஜனநாயக முன்னணி அரசு குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள மாட்டோம் என்று உறுதியாக நின்றது. வகுப்புவாத சக்திகளை எதிர்த்து சமரச மற்ற போராட்டத்தை நடத்த இடது ஜனநாயக முன் னணி உறுதியுடன் செயல்படும். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாடும் இத்தகை திசை வழியில் தேசம் தழுவிய அளவில் மதச்சார்பற்ற சக்தி களை இணைத்து விரிவான போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது. மதச்சார்பற்ற சக்திகளின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமாக வகுப்பு வாத சக்திகளை முறியடிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அத்தகைய போராட்டத் தில் வெற்றி பெறுவோம்0.
து.ராஜா
கருத்தரங்கில் உரையாற்றிய சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா பேசியதாவது: மதச்சார் பின்மை என்பது இந்திய அரசியலின் ஆணி வேர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வளர்த் தெடுக்கப்பட்டது. மகாத்மா காந்தி ஒருபுறம் தன்ன ளவில் இந்து சனாதனவாதியாக இருந்தபோதி லும் மதச்சார்பின்மையை உறுதியுடன் பற்றி நின்றவர். தனது பிரார்த்தனை கூட்டங்களில் ராம னும் அல்லாவும் ஒரு கடவுள்களே என்று பாடி யுள்ளார். நாடு பிரிவினையின்போது மத ரீதி யான கலவரங்களை தடுத்து நிறுத்த தன்னு டைய உயிரையும் பொருட்படுத்தாது பாடு பட்டார். இந்து- இஸ்லாமிய மக்களின் ஒற்றுமைக் காக குரல் கொடுத்தார். ஆகவே தான் ஆர்எஸ்எஸ் அமைப்பால் அவர் கொல்லப்பட்டார். நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உருவா கும் சமயத்தில் ஒருபக்கம் இந்து வகுப்புவாதிகளி டமிருந்து சுதந்திர அரசு இந்து அரசாக இருக்க வேண்டும் என்று நிர்பந்தமும், மற்றொரு புறம் இஸ்லாமியர்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கையும் முன்வந்தன. சுதந்திர நாடு ஒரு மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படையில் இருந்தால் தான் பாதுகாக்கமுடியும் என்பதை டாக்டர் அம்பேத்கர் உணர்ந்தே அரசியல் சட்டத்தில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை வரையறுத்தார்.
அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை வடிவமைக்கும் போது இத்தகைய பிரச்சனை கள் முன்னுக்கு வந்தபோது, அரசாங்கம் சர்ச் விவகாரங்களில் தலையிட வேண்டியதில்லை என்றும் அதேபோல சர்ச்சுகளும் அரசு விவகா ரங்களில் தலையிடக்கூடாது என்றும் அரசியல் சட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதம் ஒருவரின் சொந்த விசயம் என்பதை அரசியல் சட்டம் வகுத்துள்ளது. ஆர்எஸ்எஸ் திட்டம் நிறைவேறுமானால் இந்தியா தன்னுடைய பன்முகத் தன்மையை இழந்து விடும். மதச்சார்பின்மை பாதுகாப்பு போராட்டத்தை வலுவாக முன்னொடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. அனைத்து மதச்சார் பற்ற ஜனநாயக இயக்கங்களை- பெருந்திர ளான மக்களை திரட்டிடுவோம். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கிற்கு சிபிஎம் மத்தியக்குழு உறுப் பினர் இ.பி.ஜெயராஜன் தலைமை தாங்கினார். கடனம்பள்ளி ராமச்சந்திரன், கோவிந்தன்மாஸ் டர், சிபிஎம் கண்ணூர் மாவட்டச் செயலாளர் எம்.வி.ஜெயராஜன் ஆகியோர் பங்கேற்றனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் துவங்கப்பட்ட நிகழ்ச்சி க்கு முன்னதாகவே பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.