சென்னை, மார்ச் 15- கமலேஷ் சந்திரா பரிந்துரைத்த அறிக்கையை அமல்படுத்த வலியுறுத்தி நாடு முழுவதும் கிராமிய அஞ்சல் ஊழி யர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். அஞ்சல் கணக்கு அலுவலகத்தை பன்முகப்படுத்தக் கூடாது, கேடர் மறு சீரமைப்பை அமல்படுத்த வேண்டும், ஏ.ஏ.ஓ. தேர்வு முறைகேடுகளை சரிப்படுத்த வேண்டும், விதி 38இன்படி பணியிட மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், கமலேஷ் சந்திரா பரிந்துரை களை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் நாடு முழு வதும் தர்ணா போராட்டம் செவ்வா யன்று (மார்ச் 15) நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலக வளாகத்தில் ராமராஜ் தலைமையில் தர்ணா நடைபெற்றது. மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன் போராட்டத்தை துவக்கி வைத்தார்.
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.வி.ஸ்ரீதரன், மாநில செயலாளர் தன்ராஜ், அகில இந்திய தபால் அக்கவுண்ட்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.பி.சுரேஷ்குமார், பி 4 மாநிலச் செயலாளர் கண்ணன், பி 3 மாநிலச் செயலாளர் வீரமணி, ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் சிவகுருநாதன், ஓய்வு பெற்றோர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.மோகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதுகுறித்து தன்ராஜ் கூறுகையில், நாடு முழுவதும் அஞ்சல் துறையில் 2 லட்சத்து 69 ஆயிரம் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் உள்ளனர். கிராமப்புறத்தில் தொடர்பை ஏற்படுத்தக் கூடிய மிகப்பெரிய பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். விடுப்பு எடுக்கும் போது மாற்று நபரை வழங்காததால், பிற ஊழியர்களை வைத்து அந்த பணியையும் சேர்த்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. 11.2.22 அன்று ஒரு ஆணை பிறப்பித்ததன் மூலம் விடுப்பு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும். கமலேஷ் சந்திரா பரிந்துரைத்த ஊதியக்குழு அறிக்கையை அமல்படுத்தாமல் பல ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகிறார்கள். அந்த பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். டார்கெட் என்ற பெயரில் வீடு வீடாகச் சென்று கணக்கு பிடிக்க நிர்பந்திக்கிறார்கள். இதனால் அஞ்சல் ஊழியர்களை கண்டு மக்கள் பயந்து ஓடும் சூழ்நிலையை அரசு உருவாக்கியுள்ளது. எனவே இந்த நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்றார்.