tamilnadu

img

மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கிய காவல்துறை

மதுரை, மே 11- தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன் நிவா ரண பொருட்கள் வழங்க கோரி அரசு அலுவலங்களில் குடியேறும் போரா ட்டம் நடைபெற்றது.  சேடப்பட்டி ஒன்றியத்தில் நடை பெற்ற போராட்டத்தின் விளைவாக உசி லம்பட்டி டிஎஸ்பி ராஜா, எழுமலை காவல் ஆய்வாளர் தினகரன் ஆகி யோரின் முயற்சியில் சுமார் 107 மாற்று திறனாளிகளுக்கு கொரோனா நிவார ணமாக 1 வாரத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை சாமான் அடங்கிய தொகுப்பு பை கள் டி.இராமநாதபுரம், மேலத்திரு மாணிக்கம், மீனாட்சிபுரம், கீழதிரு மாணிக்கம், துள்ளுகுட்டிநாயக்கனூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு வழங்கினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் உடன் மாற்று திறனாளிகள் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் வி.முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேட்பட்டி ஒன்றி யச் செயலாளர் என்.ஜெயபால், ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் சங்கர், செல்லத்துரை மற்றும் உசிலம்பட்டி மருத்துவர் விஜயபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.