பேனர் வைக்க காவல்துறை அனுமதி மறுப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் விஞ்ஞானிக்குப் பாராட்டு விழா
வில்லிபுத்தூர், ஜூன் 8- புகழ் பெற்ற தமிழக விஞ்ஞானிக்குப் பாராட்டு விழா நடத்த பேனர் விளம்பரம் செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை வாய்மொழியாக அனுமதி மறுத்துள்ளது. சென்ற நூற்றாண்டின் புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி கே.எஸ்.கிருஷ் ணன் ஆவார். இவர், விருதுநகர் மாவட்டம், விழுப்பனூர் கிராமத்தில் 1898-ம் ஆண்டு பிறந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி. எஸ்.இந்து மேல்நிலைப்பள்ளியில் கல்வி கற்றார். நோபல் பரிசு பெற்ற இந்தியரான சர்.சி.வி. ராமனுடன் இணைந்து “ராமன் விளைவு கள்” என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவ ரது விஞ்ஞான சேவைகளுக்காக, 1954 ஆம் ஆண்டில் “பத்ம பூஷன்” விருது பெற் றார். 1961 இல் ரசாயன விஞ்ஞானத்திற் கான சாந்தி ஸ்வருப் பட்னாகர் நினைவுப் பரிசு பெற்றார். இந்த விருதைப் பெற்ற முதல் விஞ்ஞானி இவரே. இவரைப் பெரு மைப்படுத்தும் விதமாக கிருஷ்ணன் கோவி லில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழ கத்தின் அரங்கத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டு, அந்த அரங்கத்தின் முன்பு இவரது உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. தலைநகர் தில்லியில் ஒரு சாலைக்கு இவ ரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய புகழ் பெற்ற டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணனுக்கு விழா எடுத்து, அவரது உருவப்படத்தைத் திறந்து வைத்து, அவரது பணிகளை தமிழ் நாட்டு மாணவர்களுக்கு தெரியப்படுத்தி, அடுத்த தலைமுறையில் மேலும் பல விஞ்ஞானி களை உருவாக்க உத்வேகம் அளிக்கும் எண்ணத்துடன், ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங் டன் நூலகக் கமிட்டியின் சார்பாக இம்மாதம் 12 -ந்தேதி அன்று காலையில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. கே.எஸ். கிருஷ்ணனின் உருவப் படத்தை திறந்து வைக்க, ஸ்ரீவில்லிபுத்தூ ரைச் சேர்ந்த இந்தியாவின் மூத்த விஞ்ஞானி யான பத்ம பூஷன், பத்மஸ்ரீ டி.ராமசாமி வருகிறார். இந்த விழாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் அறிவிப்பு பேனர்கள் வைப்பதற்கு பென்னிங்டன் கமிட்டியினர் நகரக் காவல் துறையை அணுகியுள்ளனர். ஆனால், அதற்குக் காவல்துறை அதிகாரிகள் வாய்மொழியாக மறுத்து விட்டனர். இதற்கு அரசு மேலிடம் தந்த அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று கமிட்டி தரப்பில் கூறப் படுகிறது. மக்களின் கல்வி மேம்பாட்டிற் கான நிகழ்ச்சி ஒன்றுக்கு காவல்துறை விளம்பரம் செய்ய அனுமதி மறுத்தது மக்க ளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. என்று கமிட்டி நிர்வாகிகளும் கல்வி யாளர்களும் கூறுகின்றனர்.