tamilnadu

img

ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்க!

சென்னை, ஜூலை 4 - ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி செவ்வாயன்று (ஜூலை 4) மாநிலம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங் களில் மனு கொடுக்கும் இயக்கத்தை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நடத்தியது. மின்சார வாரியத்தில் மின் உற்பத்தி, மின் பகிர்மானம், அனல், புனல் மின் நிலை யங்கள், பராமரித்தல், விநியோகப் பகுதி களில் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசும் தனது தேர்தல் வாக்குறுதி யில், பொதுத்துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறியது.  இதனையொட்டி மாநிலம் முழுவதும் திட்டம் வாரிய ஒப்பந்த ஊழியர்களின் பட்டி யலை மத்திய அமைப்பு தயாரித்துள்ளது. அதனை ஆட்சியர்களிடம் வழங்கி, அரசுக்கு அனுப்பி பணி நிரந்தரம் செய்ய வலி யுறுத்தி இந்த மனு கொடுக்கும் இயக்கத்தை நடத்தியது.

இதன் ஒரு பகுதியாக சென்னை மண்ட லம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் மாநிலத் தலைவர் தி‌.ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் சுமார் 15 ஆயி ரம் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்று கின்றனர். தமிழக அரசு தேர்தல் வாக்குறு திப்படி அனைவரையும் அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற காலதாமதம் செய்யும் பட்சத்தில் அடுத்தகட்டமாக தீவிர போராட்டம் நடத்தப்படும் என்றார். இதனைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர்கள் ஒப்பந்த ஊழியர்களின் பட்டியலையும், கோரிக்கை மனுவையும் அளித்தனர். இந்தப் போராட்டத்திற்கு சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம் தலைமை தாங்கினார். பொருளாளர் வெங்கடேசன், துணைப் பொதுச் செயலாளர் ரவிக்குமார், கிளை நிர்வாகிகள் விஜயபாஸ்கர், பண்டாரம் பிள்ளை (தென்சென்னை-1), தண்டபாணி, கவுதம் (தென்சென்னை-2), வி.சீனிவாசன், எஸ்.கண்ணன் (மத்தியசென்னை), தசரதன், கணேஷ் ராவ் (மேற்கு சென்னை), சத்தியமூர்த்தி, சந்திரசேகர் (வடசென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டனார்