பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் 9 ஆவது மாநில மாநாடு
பெருமுதலாளிகளால் செயற்கையாக உருவாக்கப்படும் பஞ்சு, நூல் விலை உயர்வு
திண்டுக்கல், ஜுன் 17 - பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனத்தின் 9 ஆவது மாநில மாநாடு திண்டுக்கல் மாவட்டம் தெய்வ சிகாமணிபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துத் தொழி லாளர் சங்கமான வி.பி.சிந்தன் நினை வகத்தில் செவ்வாயன்று நடை பெற்றது. மாநாட்டுக் கொடியை சி.ஈஸ்வர மூர்த்தி வழங்க, சி.பத்மநாபன் பெற்றுக் கொண்டார். மாநாட்டு கொடியை சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் ஏற்றி வைத் தார். மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சந்திரன் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வர வேற்றார். மாணிக்கவாசகம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந் தார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன் பேசினார். பொதுச் செய லாளர் எம்.அசோகன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளா ளர் எஸ்.சக்திவேல் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். சிஐடியு மாநில உதவித் தலை வர் கே.ஆர்.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் பேரா.சோ. மோகனா, விசைத்தறி சம்மேளனத் தலைவர் பி.முத்துச்சாமி, திண்டுக் கல் மாவட்ட பஞ்சாலைத் தொழிலா ளர் சங்க நிர்வாகிகள் சி.பி.ஜெய சீலன், பாலசுப்ரமணி, கஸ்தூரி, ஏ.பி. பாசிட்டிவ் பாலமுருகன் ஆகியோர் பங்கேற்றனர். அகில இந்திய ஜவுளித் தொழில் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் மற்றும் சிஐடியு அகில இந்திய செயலாளருமான ஆர்.கருமலையான் நிறைவுரை யாற்றினார். மாநாட்டில், தலைவராக எம்.சந்திரன், பொதுச் செயலாளராக எம்.அசோகன், பொருளாளராக எஸ்.சக்திவேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உதவித் தலைவர்களாக சி.பத்மநாபன், கே. அரவிந்தன், எஸ்.தனபால், ஜி. கணேசன், ஆர்.ராமகிருஷ்ணன், சி.ஈஸ்வரமூர்த்தி, என்.மோகன் ராஜ், துணைச் செயலாளர்களாக வி.மாணிக்கவாசகம், எம்.கண்ண தாசன், வடிவேல்குமார், ஆர். வெங்கடாச்சலம், எம்.ஆனந்த குமார், ஆர்.மணிகண்டன், பி.பால சுப்ரமணி, ஜி.அருணாதேவி ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெருமுதலாளிகளால் செயற்கையாக உருவாக்கப்படும் பஞ்சு, நூல் விலை உயர்வு
திண்டுக்கல், ஜூன் 17 - இந்திய பெருமுதலாளிகளால் செயற்கையாக உருவாக்கப்படும் பஞ்சு, நூல் விலை உயர்வு காரண மாக பஞ்சாலைத் தொழிலும், தொழிலாளர்களும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர் என்று ஆர்.சச்சி தானந்தம் எம்.பி., தெரிவித்தார். மேலும் பேசுகையில், “பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு காரண மாக பஞ்சாலைத் தொழிலும், பஞ்சாலைத் தொழிலாளர்களும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்ற னர். தொழிலாளர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி சங்கத்தை உருவாக்கி செயல் படுத்த வேண்டும். பஞ்சாலைத் தொழில் ஒரு கடு மையான நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. பஞ்சாலைத் தொழி லாளர்களின் கோரிக்கை மட்டு மல்ல, இந்த பஞ்சாலைகளை பாது காக்கிற போராட்டத்தையும் இந்த காலக்கட்டத்தில் நாம் நடத்த வேண்டியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அதிக பருத்தியை விளை விக்கிற மாவட்டமாகும். விவ சாயிக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. காரணம், பருத்தி விவசாயம் செலவு கூடுதலான விவ சாயமாக உள்ளது. இன்றைக்கு பஞ்சாலை முதலா ளிகள் தங்களுக்கு தேவையான பஞ்சை வாங்குவதற்கு, குஜராத், அகமதாபாத், மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளுக்குச் சென்று பருத்தியை கொள்முதல் செய்கின்றனர். அதில் கூடுதலான போக்குவரத்துச் செலவை சந்திக்க வேண்டியுள்ளது. காட்டன் கார்ப்பரேசன் ஆப் இந்தியா பருத்தி கொள்முதல் செய்வதிலிருந்து விலகி நிற்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தி யாவில் விளையும் பருத்தியை கொள்முதல் செய்கிறார்கள். பின்னர் பெருமுதலாளிகள் செயற் கையாக விலை உயர்வை உரு வாக்குகிறார்கள். இதுவும் பஞ்சு விலை உயர்விற்கு காரணமாக இருக்கிறது. இது பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வாக மாறுகிறது. பஞ்சாலைத் தொழிலை மட்டு மல்ல, கார்மெண்ட்ஸ் தொழிலை யும், பனியன் தொழிலையும் பாதிக் கிறது. இந்த பாதிப்புக்கெல்லாம் காரணம் அரசு பெருமுதலாளி களுக்கு வழங்கும் சலுகைகள் தான். இதனை நாம் கவனத்தில் கொண்டு பஞ்சாலைத் தொழிலா ளர்களை மட்டுமல்ல பஞ்சாலை களையும் பாதுகாக்க வேண்டி யுள்ளது. அந்த வகையில் நமது பஞ்சா லைத் தொழிலாளர் சங்கம் நடத்து கிற இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும்” என்றார்.