மதுரை, ஜூன் 26- அதிமுகவில் நடை பெறும் சம்பவங்கள் யாரால் நடத்தப்படுகிறது என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என ஓ.பன்னீர் செல் வம் தெரிவித்துள்ளார். தில்லியிலிருந்து சென்னை வழியாக மதுரை வந்த அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது அவர் கூறிய தாவது: அதிமுக தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். எல்லா சிக்கலும் விரைவில் தீரும். அதற்கு காரணம் யார் என்ப தும் எனக்குத் தெரியும். சதி வலையை பின்னியவர் களுக்கு தொண்டர்களும், மக்களும் உரிய தண்டனை யை அளிப்பார்கள் என்றார். உங்களுடைய எதிர் கலம் என்ன? என்பது குறித்து செய்தியாளர்களின் கேள் விக்கு, என்னுடைய எதிர் காலத்தை அதிமுக தொண் டர்களும், பொதுமக்களும் தீர்மானிப்பார்கள் என்றார். மேலும், ஓ.பன்னீர்செல் வம் தேனியில் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ள தாகவும் தகவல்கள் தெரி விக்கின்றன.
செல்லூர் ராஜூ
முன்னதாக, மதுரையில் செல்லூர் ராஜூ அதிமுக ஒற்றை தலைமை குறித்து செய்தியாளர்களிடம் கூறு கையில், ‘‘சாதி ரீதியாக பிரி வினை ஏற்படுத்துபவர் களுக்கு அதிமுக தொண்டர் கள் இடம்கொடுக்கக் கூடாது. அதிமுக தொண்டர்கள் எப் போதும் சாதி, மதம், பார்ப்ப தில்லை, மதச்சார்பற்றவர் களாகவே இருந்து வருகின்ற னர். ஜூலை 11-ஆம் தேதி அதி முக பொதுக்குழு திட்டமிட் டப்படி நடைபெறும்’’ என்று கூறினார்.
‘ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி’
அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் மதுரையில் செய்தியா ளர்களிடம் கூறுகையில், ‘‘அதிமுகவில் ஏற்பட்ட பிள வுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பன்னீர்செல் வம்தான்; தொண்டர்களை அரவணைத்துச் செல்லா ததே அவரின் வீழ்ச்சிக்கு கார ணம். எங்களுக்கு சந்தேக தலைமை வேண்டாம், நம் பிக்கைக்குரிய தலைமையே வேண்டும். குடும்ப நலனில் மட்டுமே ஓபிஎஸ் அக்கறை காட்டினார். அதிமுக தொண் டர்களை கண்டுகொள்ள வில்லை. அதிமுகவுக்கு நம்பிக் கைக்குரிய, வலிமையான தலைமையே தேவை. அதி முகவை முடக்கவே ஓபிஎஸ் தரப்பு முயற்சிக்கின்றனர். ஒற்றை தலைமைக்கு ஆத ரவளித்தால், ஓபிஎஸ் எதிர் காலம் பிரகாசமாக இருக் கும்’’ என்று கூறினார்.