நூறு நாட்களில் நூறு சதவீதம் அடைவு மதிப்பீடு'
ஐந்து பள்ளிகளில்
ணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஐந்து பள்ளிகளில் 100 நாட்களில் 100 சதவீதம் அடைவு மதிப்பீட்டு, மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் செழியன் தலைமையிலும், வட்டார கல்வி அலுவலர் அமுதா மற்றும் மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களின் அடிப்படை திறன்களான தமிழ், ஆங்கிலம் வாசித்தல் மற்றும் அடிப்படை கணித முன்னேற்றங்களை மதிப்பீடு செய்து 100 நாட்களில் 100 சதவீதம் முன்னேற்றம் அடைந்ததினை மதிப்பீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில், மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பானா வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொன்னகரம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டுமாவடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலஸ்தானம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வெள்ளூர் ஆகிய பள்ளிகளில் நூறு நாட்களில் நூறு சதவீதம் வாசித்தல் மற்றும் அடிப்படை கணித மதிப்பீடுகளை மேற்கொள்ளப்பட்டது. இப்பள்ளிகள் நூறு நாட்களில் நூறு சதவீதம் அடிப்படைத் திறன்களை பெற்றுள்ளனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் மதிப்பீடு செய்தனர். இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.