சென்னை, ஏப்.21- தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வித்தார். தமிழக சட்டப் பேரவையில் வியாழ னன்று(ஏப்.21) கேள்விநேரம் முடிந்ததும் விதி 110-ன்கீழ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர் பான அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த தமிழகத்தின் 4 மண்ட லங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், தமிழக விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டி களில் பதக்கம் வெல்வதற்கு வழிகாட்ட ஒரு முயற்சியாக “ஒலிம்பிக் தங்கம் தேடுதல்” என்ற திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்படும். அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளி லும், தலா ரூ. 3 கோடியில் சிறு விளை யாட்டு அரங்கங்கள் நிறுவப்படும். இதன்மூலம், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்த கிராமம் மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் பயனடைவார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம்!
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக் கென்றே தனியாக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும். தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தியத் தற்காப்புக் கலைகளில் ஒன்றாக விளங்கிக் கொண்டி ருக்கக்கூடிய சிலம்பம் விளையாட்டை ஊக்கப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சிலம்ப வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக் கான வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற் கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மீண்டும் சென்னை ஓபன்டென்னிஸ்!
தமிழகத்தில் பல்வேறு சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்த முயற்சி கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இதன்மூலம் தமிழகத்தில் விளை யாட்டைச் சார்ந்த பொருளாதாரம் உருவாக வும், அதனை மேம்படுத்தக்கூடிய நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அந்த வகையில், சென்னை ஓபன் (ஏடிபி) டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்த வும், பீச் ஒலிம்பிக் எனப்படும் கடற்கரை ஒலி ம்பிக்ஸ் தொடரை நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டுப் போட்டிகள் நடத்துவதன் மூலம் விளையாட்டுத் துறையில் புதிய முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் ஏற்ப டும். இதனையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து, தமிழகத்தில் சுற்று லாத் துறை வளர்ச்சியடைவும் வாய்ப்புகள் ஏற்படும்.
செஸ் ஒலிம்பியாட் குழு!
இந்தியாவில் விளையாட்டு உலகின் மணிமகுடமாக விளங்கக்கூடிய 44-ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28.7.22 முதல் 10.8.22 வரை தமிழகத்தில் உலகமே வியக்கக்கூடிய வகையில் பிரம்மா ண்டமாகத் தமிழக அரசு நடத்துகிறது. இதில் உலகிலுள்ள 180 நாடுகளைச் சார்ந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள். 44-ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்து வதற்கு ஒரு குழு ஏற்படுத்தப்படும். இந்த பணிகள் மூலம் தமிழகத்தின் இளைய சக்தியை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்த தமிழக அரசு எப்போதும் முனைப்புடன் செயல்படும் என்று கூறினார்.