tamilnadu

img

நீர் மோர் பந்தல் திறந்து 50 நாட்கள் நிறைவு

நீர் மோர் பந்தல் திறந்து 50 நாட்கள் நிறைவு

பாபநாசம், ஜூன் 18 - திமுக தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு சிறு பான்மையினர் நல உரிமைப்  பிரிவு சார்பில் கும்பகோணம்  - தஞ்சாவூர் மெயின் சாலை யில், தஞ்சாவூர் பேருந்து பயணியர் நிழற்குடை அரு கில் கோடைக்கால நீர்மோர்  பந்தல் திறக்கப்பட்டது. செவ்வாயன்று இதன் 50 ஆவது நாள் நிறைவையொட்டி பொதுமக்களுக்கு ரோஸ்  மில்க், லெமன், நீர் மோர், சர்பத், பலாச்சுளை,  நுங்கு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் பாவை அனிபா, திமுக மாவட்ட துணைச் செயலர்கள் அய்யா ராசு, துரைமுருகன், பாபநாசம் பேரூராட்சித் தலைவி பூங்குழலி, மாநில அயலக அணி துணைச் செயலர் விஜயன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராஜா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கார்த்தி, கலை இலக்கிய பேரவை மாவட்ட  துணை அமைப்பாளர் முபாரக் ஹீசைன் உட்பட பலர் பங்கேற்றனர்.