தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் சம்பளப் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ் தலைமை வகித்தார். இதில் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.