tamilnadu

img

இஸ்லாமியர்கள் மீது கொலைப் பழி; மதுரை ஆதீனத்தின் மதக்கலவர முயற்சி

இஸ்லாமியர்கள் மீது  கொலைப் பழி; மதுரை ஆதீனத்தின் மதக்கலவர முயற்சி

சிசிடிவி காட்சிகள் மூலம்  வெளிச்சத்திற்கு வந்த உண்மை

 உளுந்தூர்பேட்டை அருகே நடந்த விபத்தை வைத்து, தன்னை இஸ்லா மியர்கள் திட்டமிட்டு கொலை செய்ய முயன்ற தாக மதுரை ஆதீனம் தரப்பில் குற்றம்சாட்டப்பட் டிருந்தது. இந்நிலையில், அவர் கூறியது அனைத்தும் அப் பட்டமான பொய் என்பது சிசி டிவி காட்சிகளின் அடிப்படை யில் உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக பேட்டி யளித்த ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

துணிந்து பொய்சொன்ன மதுரை ஆதீனம்

அண்மையில், மதுரை  ஆதீனம் ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமார்ச்சா ரிய சுவாமிகள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.  அதில், “சென்னையில் நடக்கும் சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்பதற் காக, மதுரையில் காலை 5:30 மணிக்கு பூஜை முடித்துவிட்டு, 6:00 மணிக்கு கிளம்பி, சென்னையை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தோம். உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது, திரும்பும் இடத்தில், சாலை தடுப்பை இடித்து தள்ளிய படியே வந்த ஒரு கார், என் காரை வந்து இடித்தது. அந்த விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில், நிலைகுலை ந்து மயக்கமாகிவிட்டேன்.

மதக்கலவரத்தைத் தூண்டிவிட முயற்சி

என் டிரைவர், இடித்த வர் யார் என பார்க்கும்போது, அவர் தொப்பி அணிந்து, தாடி வைத்திருந்தார். அந்த காரில், ‘நம்பர் பிளேட்’ இல்லை. இது தொடர்பாக, போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை. சிவபெருமானிடம் புகார் அளித்துள்ளேன். இங்கு  சிறுபான்மையினருக்கு தான் சலு கைகள், அப்படி இருக்கும்போது, நான் புகார் கொடுத்தால் எடுக்காது”  என கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  ஆதீனத்திற்கு ஆதரவாக திரு வாவாடுதுறை ஆதீனம், பாஜக மாநிலத்  தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை  ஆகியோரும் குரல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் தான், போலீசார் நடத்திய விசாரணையில் ஆதீனம் சொன்னது அனைத்தும் பொய் என்பது அம்பலமாகியுள்ளது.

உண்மையை வெளிச்சம்போட்ட சிசிடிவி

சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கையில், “பேரிகார்டை உடைத்துக்கொண்டு வந்தனர் என்று  ஆதீனம் கூறியது பொய். அப்படி ஒன்று அங்கே நடக்கவே இல்லை. விபத்துக்குப் பிறகு காரை நிறுத்தா மல் சென்றுவிட்டனர்; இதில் நான் மயக்கமடைந்து விட்டேன், என்று கூறியதும் பொய். விபத்தில் சிக்கிய  இரண்டு காரும் அங்கேயே நிற்கிறது.  அடுத்ததாக ஆதீனத்தின் கார் டிரை வர், தொப்பி அணிந்து தாடி வைத்த  ஒரு நபர் காரில் நம்பர் பிளேட் இல்லா மல் ஓட்டி வந்து மோதினார், என்று கூறியதும் பொய். காரில் நம்பர் பிளேட் இருக்கிறது. அதோடு கார் இடித்த வேகத்தை பார்க்கையில் அவர் சொன்ன அடையாளங்களை ஆதீனமே கவனித்திருக்க முடியாது.  அதுவும் பொய்” என்று உறுதிப் படுத்தப்பட்டது. 

ஆதீனத்தின் ஓட்டுநரே விபத்திற்கு காரணம்

விபத்து நடந்ததை எடுத்துக் கொண்டாலும், “மதுரை ஆதீனம் பயணித்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க  விபத்துக்கு காரணம்” என்பது சிசிடிவி  அடிப்படையில் உறுதியாகியிருக் கிறது. இவ்வாறிருக்க, “சம்பவம் தொ டர்பாக போலீசில் புகார் தரவில்லை.  இந்த நாட்டில் சிறுபான்மையின ருக்கே சலுகைகள் அதிகம். என் புகாரை எடுக்கமாட்டார்கள். எனவே ஆண்டவன் சிவபெருமானிடம் புகார்  தந்துவிட்டேன்” என்று மதத்தை இழுத்து மதுரை ஆதீனம் பேட்டி  அளித்ததன் மூலம் மதக்கலவரத்தை  தூண்டுவது மட்டுமே அவரது நோக்கமாக இருந்தது தெரியவந்தது.

வாலிபர் சங்கத்தினர் மதுரையில் புகார்

எனவே, மதக்கலவரத்தை தூண்ட முயன்ற மதுரை ஆதீனம், அவரது ஓட்டுநர், உதவியாளர் ஆகி யோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள்  வலியுறுத்தின. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  மாவட்டத்  தலைவர் அ.பாவெல் சிந்தன், மாவட்டச் செயலாளர் த.செல்வ ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் விக்கி, போனிபேஸ், சுபஸ்ரீ, நவீன்,  நந்தா, தீலிபன், வில்வா, முனி யாண்டி உள்ளிட்டோர் மதுரை காவல் துறை ஆணையரிடம் நேரில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. அதேபோல, மதுரை ஆதீனத்தின்  கார் ஓட்டுநர், போக்குவரத்து விதி முறைகளை மீறி அதிவேகமாகவும் அலட்சியமாகவும் அஜாக்கிரதை யாகவும் காரை ஓட்டி வந்ததாக- சேலத்திலிருந்து சென்னை நோக்கிச்  சென்ற காரின் ஓட்டுநர் முபாரக் அலி  உளுந்தூர்பேட்டை காவல்நிலையத் தில் புகார் அளித்தார். அதன்பேரில் தற்போது ஆதீனத்தின் கார் ஓட்டுநர்  மீது 2 பிரிவுகளில் உளுந்தூர் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.