tamilnadu

img

அன்றாட நுகர்வுப் பொருட்களின் விலைகள் மேலும் உயர்கின்றன!

புதுதில்லி, அக். 28 - உள்ளீட்டுச் செலவுகள் அதி கரிப்பால், மக்களின் அன்றாட நுகர்வுப் பொருட்களின் விலைகளை உயர்த்த எப்எம்சிஜி (FMCG) எனப்படும் விரைவில் விற்றுத்தீரும் நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதனால், பற்பசைகள், சோப்புக் கள், காபி, தேயிலைத் தூள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் விரைவில் உயர உள்ளன. இதற்கு இந்தப் பொருட்களின் தயாரிப்பு மற்றும் சந்தைக்கு கொண்டு வருவதற்கான செலவினங் கள் உயர்வே, விற்பனை விலை உயர் வுக்கு காரணம் என நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக, நடப்பு டிசம்பர் காலாண்டிலேயே, ஹிந்துஸ்தான் யூனி லீவர் லிமிடெட் (HUL), அதானி வில்மர் மற்றும் டாடா நுகர்வோர் பொருட்கள் நிறுவனம் (TCPL) போன்ற உலகின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் (FMCG) விற்பனை நிறுவனங்கள், விலைகளை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, செப்டம்பர் காலாண்டு வரையிலான கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் காபி விலையானது 60 சதவிகிதமும், தேயிலை 25 சத விகிதமும், பாமாயில் 10 சதவிகிதமும் விலை உயர்ந்தது. நடப்புக் காலாண்டில், கச்சா எண்ணெய் விலை 10 சதவிகிதம் குறைந் துள்ள போதிலும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை 12.5 சதவிகி தத்திலிருந்து 32.5 சதவிகிதமாக வும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் களுக்கான பயனுறு வரி விகிதத்தை 35.75 சதவிகிதமாகவும் உயர்த்த செப்டம்பர் 14-இல் அரசு எடுத்த முடிவைத் தொடர்ந்து சமையல் எண்ணெய் விலை உயர்ந்தன. இந்நிலையில், தற்போது மேலும் விலை உயர உள்ளது. அதானி வில்மர் நிறுவனம், பார்ச்சூன் என்ற பிராண்டின் கீழ் சமையல் எண்ணெய்யை விற்பனை செய்து வரும் நிலையில், இந்த சமை யல் எண்ணெய் பிரிவானது, செப்டம்பர் காலாண்டில் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 21 சதவிகிதம் வளர்ச்சி  கண்டது, அடிப்படை விற்பனை அளவு 17 சதவிகிதம் வளர்ச்சி கண்டது.  எனினும், அதானி வில்மர் நடப்பு (டிசம்பர்) காலாண்டில் சமையல் எண்ணெய் விலையை குறைந்தது 20 சதவிகிதம் அளவிற்கு உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.  ஏனைய எப்எம்சிஜி நிறுவனங் களும் இதேபோல விலையை உயர்த்த உள்ளன.

ஆனால், ஒரே முறை விலை உயர்வுக்கு பதிலாக, கொஞ்சம் கொஞ்சமாக விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளன. உதாரணத்திற்கு டாடா நுகர்வோர்  பொருட்கள் (TCPL) நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், தேயிலை தயாரிப்புக்கான செலவு 30 சதவிகிதம் அதிகரித்து இருந்தாலும், நுகர் வோருக்கான விலையில் வெறும் 3 அல்லது 4 சதவிகிதத்தை மட்டுமே உயர்த்தியுள்ளது. டிசிபிஎல் நிறுவனமானது, காபி  உள்ளிட்ட குடிக்கத் தயார் நிலையி லான பானங்கள் மற்றும் பருப்பு வகை கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. செப்டம்பர் காலாண்டில் 3 சதவிகிதம் விற்பனை அளவு வளர்ச்சி கண்ட ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமி டெட், டிசம்பர் காலாண்டில் தனது ஸ்கின் கிளென்சிங் மற்றும் தேநீர் பிரிவுகளில் குறிப்பிடத்தக்க விலை உயர்வைச் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சக போட்டி நிறுவனங்களின் நடவடிக்கைகளைப் பொறுத்து விலை உயர்வின் அளவு இருக்கும் என அந்நிறுவனம் தெரி வித்துள்ளது.  ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்  நிறுவனமானது, லக்ஸ், டவ், பியர்ஸ் ஆகிய ஸ்கின் கிளென்சிங் பிராண்டுகளையும், புரூக் பாண்ட் மற்றும் தாஜ் தேநீர் பிராண்டுகளையும் விற்பனை செய்கிறது. டிசம்பர் காலாண்டில் விற்பனை அளவை விட,  விலை உயர்வே நிறுவனத்தின் வளர்ச்சி யில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று  அந்த நிறுவனம் கூறுகிறது. இந்த விலை உயர்வுகள் டிசம்பர் காலாண்டில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அந்த நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.