tamilnadu

img

‘நம்ம ஊர் பள்ளி’ திட்டத்திற்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ரூ.1.29 கோடி நிதி

சென்னை,ஜன.21- நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு தமிழ் மாநில அமைச்சர்கள்  மற்றும் திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஒருமாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக்  கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலை மைக் கொறடா கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மாதம் 12 ஆம் தேதி “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்தைத் தொடங்கி வைத்து, அரசுப்  பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்த அரசுடன் மக்களும்  கைகோர்க்க வேண்டும் என்றும், இதற்கு தேவையான நிதியை வழங்க வேண்டு மெனகோரியும் கோரிக்கை விடுத் தார். தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விழா விலேயே ரூ. 5 லட்சத்திற்கான காசோ லையினை வழங்கினார். அந்தக் கோரிக்கைகயை ஏற்று, பல்வேறு அமைப்பினர் நிதி உதவி வழங்கி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, பி. அப்துல் சமது, மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கு.சின்னப்பா, எம். பூமிநாதன்,  டி.சதன் திருமலைகுமார், ஏ.ஆர்.ஆர். ரகுராமன் ஆகியோர் தங்களது ஒருமாத ஊதியத்திற்கான காசோலைகளையும் மற்றும் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின் ராஜ் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.