பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை அமைச்சர் வழங்கினார்
பட்டாசு ஆலை வெடி விபத்து
சிவகாசி, ஜூன் 8- சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயி ரிழந்த மற்றும் காயம டைந்தோரின் குடும்பத்தின ருக்கு ரூ.20 லட்சம் நிவார ணத்தை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். சிவகாசி அருகே ஆனை யூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் நடைபெற்ற இந்நிகழ்ச் சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை யேற்றார். மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், சார் ஆட்சி யர் ப்ரியா ரவிச்சந்திரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். கடந்த ஏப்.26 அன்று நெடுங்குளம் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயி ரிழந்தவர்களின் வாரிசு தாரர்கள் மற்றும் காயம டைந்தவர்கள் என 10 பேருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.20 லட்சத்திற்கான காசோலை களை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஆணையர் சரவணன், துணை மேயர் விக்னேஷ் பிரியா உட்பட பலர் பங்கேற் றனர்.