tamilnadu

img

அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுவர்

சென்னை,நவ.14- “தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவது படிப்படி யாக நடை முறைப்படுத்தப்படும்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவ மனையில் பணியாற்றும் பாலாஜி என்ற மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  தாக்குதலில் மருத்துவர் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் காயம் ஏற்பட்டது. மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்து, 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும், மருத்துவர் பாலாஜியை  வியாழக்கிழமை (நவ.14) அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், “புதன்கிழமையன்று 11 அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளடக்கியிருக்கும் சங்கங்களுடனான கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. நடைபெற்ற சம்பவம் குறித்து பெரிய அளவிலான வருத்தம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அந்த வகையில் அவர்களும் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு திருப்தி தெரிவித்தார்கள். அனைத்து அரசு மருத்து வர்கள் சங்கங்களும் மிகச் சிறப்பாக ஒத்து ழைப்பு வழங்கி தமிழகம் முழுவதும் மருத்துவச் சேவை பாதிக்கப்படாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

மெட்டல் டிடெக்டர் 

அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனும் மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து நான் பேசவுள்ளேன். பின்னர் அனைத்து மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகளுடனான கூட்டமும் நடத்தப்படவுள்ளது. மருத்துவர்களின் கோரிக்கைகளுள் ஒன்றான மெட்டல் டிடெக்டர் அனைத்து மருத்துவமனைகளிலும் அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்கள். இதற்கான  சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்கு ஒரு சில இடங்களில் அமைக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது, மிக விரைவில் எந்த மருத்துவ மனை என்று அறிவிக்கப்படும். தற்போதைய காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் சேவை பெற வரும்  பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2021-க்கு முன்னர் 6,500 பேர் புறநோயாளிகளின் எண்ணிக்கை இருந்தது என்பது தற்போது 12 ஆயிரம் நபர்களாக உயர்ந்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 2021-க்கு முன்னர் 3 ஆயிரம் பேர் வந்திருந்தனர், தற்போது 4,500 பேர் புறநோயாளிகளாக வருகின்றனர்.  கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி முதல்,  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை யில் 4 நிறங்களைக் கொண்ட கையில் கட்டிக்கொள்ளும் வகையில் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறை யில் இருக்கிறது. இந்த நடைமுறை படிப்படி யாக 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களிலும், 37 மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைகளிலும், 320 வட்டார அரசு மருத்துவமனை களிலும், அடையாள அட்டை நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுவது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.  அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலை 9 மணிக்கு தொடங்கி 1 மணிக்குள் ளாகவே புறநோயாளிகள் சேவை முடிக்க வேண்டும். மெட்டல் டிடெக்டர்கள் ஒரு சில இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்  தெரிவித்தார்.