tamilnadu

img

முதலீட்டை 3 மடங்கு அதிகரிக்க திட்டம்

சென்னை, டிச. 7- அடுத்த மூன்று ஆண்டு களில் தமிழகத்தின் முதலீட்டை, 3 மடங்காக  அதிகரிக்க திட்டமிட்டுள் ளோம் என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித் துள்ளார். சென்னை வேளச்சேரி யில் இந்திய தொழில் கூட்ட மைப்பின் 12ஆவது நிதி நிலை மாநாடு நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுத்த மூன்று  ஆண்டுகளில் தமிழகத்தின்  முதலீட்டை, 3 மடங்காக  அதிகரிக்க திட்டமிட்டுள் ளோம். கடந்த 18 மாதங்க ளில் 10 பில்லியன் டாலர் முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உரு வாக்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக 14ஆவது இடத்தில் இருந்த  தமிழகத்தை, 3ஆவது இடத்திற்கு முன்னேற்றி உள்ளோம். கடந்த 18 மாதங்களில் கொரோனா பெருந்தொற்று போன்ற வைகளை சமாளித்து பொருளாதாரத்தை சீராக  வைத்துள்ளோம். நம் முடைய பொருளாதாரத் திற்கு முதுகெலும்பாக சிறு,  குறு மற்றும் நடுத்தர நிறு வனங்கள் இருக்கிறது. அதில் வேலை வாய்ப்பு கள் அதிகம் உருவாக்கப்படு கிறது. வங்கி முதலீட்டில் தமிழ கம் தொடர்ந்து முதலிடத் தில் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இந்திய அளவில் மட்டுமின்றி, தமிழ கத்திலும் மொத்த உள் நாட்டு உற்பத்தி வேகம் குறைந்த  நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கி யுள்ளது. தமிழ்நாடு அரசு தகுந்த நிதிநிலைமை நட வடிக்கைகளை எடுத்ததால், மற்ற மாநிலங்களை ஒப்பிடு கையில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.