tamilnadu

img

அச்சா ஜீ..! பஹுத் அச்சா ஜீ..!

நாடாளுமன்ற எம்பிக்களின் கூட்டம். அனைவரும் மாஸ்க் அணிந்து, கூடுதலாக வாயையும் பொத்தியபடி, இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர். மோடியும் ஷாவும் உள்ளே வருகின்றனர்.  எம்பிக்கள் எழுந்திருக்கின்றனர்.

அமித் ஷா : ஆராம் சே பைட்டியே.. இப்ப மோடிஜீ உங்க கிட்ட பேசுவார். நீங்களும் பேசலாம்னு நெனக்காதீங்க. சும்மா உட்காந்திருந்தா போதும்.  அவர் அப்பப்ப கையை உயர்த்தும்போது அச்சா ஜீ..! பஹுத் அச்சா ஜீ..! -ன்னு கோரசா சொல்லணும். சரியா?

                     (எம்பிக்கள் தலையை அசைக்கின்றனர்) 

மோடி : இந்தியா பாய்ச்சல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருப்பதைப் பார்த்து உலக நாடுகள் எல்லாம் பிரமித்துப் போய் உள்ளன. உலகம் இதுவரை இப்படியொரு வேகத்தைப் பார்த்தது இல்லை. நான் பிரதமர் ஆக வந்த 2014-ஆம் ஆண்டில் புதிய இந்தியா பிறந்தது என்று உங்களுக்குத் தெரியும். அதிலிருந்து எப்போதெல்லாம் நான் சொல்கிறேனோ அப்போதெல்லாம் புதிய இந்தியா பிறந்து கொண்டே இருக்கிறது. நாட்டில் தேர்தல்கள் வரும்போதெல்லாம் அது பிறக்கும். பிரசவம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றக் கட்டிடம் அருகில் 75000 கோடி ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்டமான ஆஸ்பத்திரியை நாம் கட்டிக் கொண்டிருக்கிறோம். ஏன் 75000 கோடி? இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன என்பதை இந்த ஆஸ்பத்திரி உலகிற்கு அறிவிக்கும். 

                        (மோடி கையை உயர்த்துகிறார்)

    எம்பிக்கள் அச்சா ஜீ..! பஹுத் அச்சா ஜீ..! என்கின்றனர் கோரசாக..

மோடி :  வரும் சுதந்திர தினம் “ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்” என்ற பெயரில் விமரிசையா கக் கொண்டாடப்படும். 2047-ஆம் ஆண்டில் இந்தியாவின் 100-ஆவது சுதந்திர தினம் வருகிறது. அதைக் கொண்டாட இப்போதிலிருந்தே நாம் திட்டமிடத் தொடங்க வேண்டும். அப்போதும் நான்தான் பிரதமர் ஆக இருப்பேன். எதிர்க்கட்சிகள் சோர்ந்து போவார்கள்தான். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?  அண்மையில் உலக ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஜோ பைடன் 100-க்கு மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட ஒரு மாநாட்டைக் கூட்டினார். “உலகத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்தியா உறுதுணையாக இருக்கும்” என்று நான் உத்தரவாதம் அளித்த பிறகுதான் உலக  நாடுகளுக்கு அதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. இந்த ஆண்டில் மியான்மரின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் என் தலையில்தான் விழுந்திருக்கிறது. ஜனநாயகத்தின் மகத்துவம் பற்றி.. நமது அரசியல் சட்டத்தின் அருமை பெருமை பற்றி யெல்லாம் நான் மாணவர்களிடம் “பரீக்சா பார் சர்க்கார்”  என்ற தலைப்பில் மாதம் ஒரு முறை பேசப் போகிறேன். அதனால் பள்ளி, கல்லூரிகளில் இனி ஆசிரியர், பேராசிரியர்களை நியமிக்க வேண்டிய அவசியம் இருக்காது. மாணவர்களிடம் நான் பேசுவதெல்லாம் புதிய தேசிய கல்விக் கொள்கையில் சேர்க்கப்படும். 

                    (மோடி கையை உயர்த்துகிறார்)

  எம்பிக்கள் அச்சா ஜீ..! பஹுத் அச்சா ஜீ..! என்கின்றனர் கோரசாக...  

மோடி : நம் ஜனநாயகத்தில் ஒரு குறை. போலி வாக்காளர்கள் பெருகி விட்டனர். வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்க நேரு எதுவும் செய்யவில்லை. அதற்குப் பிறகு வந்த பிரதமர்களும் எதுவும் செய்யவில்லை. அந்தக் குறையைப் போக்க நான் வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கப் போகிறேன். போலி வாக்காளர்கள் யார் என்ற கேள்வி எழும்.. நமக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள்தான் போலி வாக்காளர்கள். அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து ஆதார் அட்டை நீக்கிவிடும்.  அயோத்தியில் நாம் கட்டிக் கொண்டிருக்கும் ராமர் கோயிலை சீக்கிரமே திறக்கப் போகிறோம். அது திறக்கப்படும் தினம்தான் பாரத மாதாவின் உண்மையான சுதந்திர தினம். பாபர், அவுரங்கசீப் கட்டிய மசூதிகளையெல்லாம் இடித்துத் தள்ளிவிட்டு அந்த இடங்களில் புதிய   கோயில்களைக் கட்டப் போகிறோம். முஸ்லிம்கள் அவர்களாகவே பாகிஸ்தானுக்கோ, பங்களாதேஷிற்கோ ஓடி விடுவது அவர்களுக்கு நல்லது. நல்ல வேளை நான் அவர்களைப் பற்றிப் பேசவில்லை என்று கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டாம். நமது அடுத்த டார்கெட் அவர்கள்தான். நமது பரிவாரத்தினர் இப்பவே சர்ச்சுகளுக்குள் புகுந்து கிடைப்பதையெல்லாம் அடித்து நொறுக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதை கிறிஸ்தவர்கள் தங்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை எனப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. ஏசுவை ஜெபிப்பதை நிறுத்தி விட்டு ருத்ராட்ச மாலை அணிந்து இந்துக் கடவுள்களை ஜெபிக்க ஆரம்பித்தால் அவர்கள் தப்பிக்க முடியும். இந்தியாவின் ஒரே மதம் இந்து மதம்தான் என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டால் பிரச்சனை ஏது?

                   (மோடி கையை உயர்த்துகிறார்)

  எம்பிக்கள் அச்சா ஜீ..! பஹுத் அச்சா ஜீ..! என்கின்றனர் கோரசாக.. 

மோடி : இறுதியாக நமது புனிதமான அரசுக்கெதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் எவ்வளவு நாட்கள் போராடினாலும் கண்டுகொள்ளக் கூடாது என்பதுதான் இந்து ராஷ்ட்ராவின் கொள்கை. ஐந்து மாநிலங்களில் தேர்தல்கள் வந்ததால்தான் விவசாயிகள் சட்டத்தை விலக்கிக் கொண்டேன். அந்தத் தேர்தல்கள் முடிந்ததும் விவசாயிகளது நிலை புறப்பட்ட இடத்திற்கே திரும்புமா அல்லது பேச்சுவார்த்தை முடிவுகளை ஏற்றுக் கொள்வேனா என்பது தேர்தல் முடிவுகளைப் பொறுத்தது.  எங்களிடம் ஆயுதப்படை இருக்கிறது.. அதிகாரம் இருக்கிறது.. கார்ப்பரேட் நண்பர்கள் இருக்கி றார்கள்.. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் இருக்கின்றன. யாருக்கும் அஞ்சக் கூடாது என்று திருவள்ளுவரும் பாரதியாரும் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். சரியா?

                  (மோடி கையை உயர்த்துகிறார்)

 எம்பிக்கள் அச்சா ஜீ..! பஹுத் அச்சா ஜீ..! என்கின்றனர் கோரசாக.. 

அமித் ஷா : கூட்டம் முடிந்தது. நீங்கள் போகலாம்.. ! 

சிறிதளவு கற்பனை : ராஜகுரு