tamilnadu

img

மே 27 சென்னையில் மாபெரும் போராட்டம்

மே 27 சென்னையில் மாபெரும் போராட்டம்

கரும்புக்கு நியாயமான கொள்முதல் விலை கோரி 

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

திருவள்ளூர், ஏப். 20- கரும்பு விவசாயிகள் கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மே 27 அன்று சென்னையில் நடை பெறும் மாபெரும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந் திரன் அறைகூவல் விடுத்தார். தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் கோரிக்கை மாநில மாநாடு ஞாயி றன்று (ஏப் 20), திருவள்ளூர் மாவ ட்டம், திருத்தணியில் நடைபெற்றது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சி.பெருமாள் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டை சிபிஎம் சட்ட மன்ற குழுத் தலைவர் நாகை மாலி துவக்கி வைத்து பேசினார். கரும்பு விவசாயிகள் சங்கத்தின் திரு வள்ளூர் மாவட்டச் செயலாளர் என்.ஸ்ரீநாத் வரவேற்றார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நட ராஜன், மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு, மாநில செயலாளர் பி.துளசி நாராயணன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மதுரை என்.பழனிச்சாமி,  செய்யாறு அரிதாஸ், தருமபுரி வாஞ்சி,  தஞ்சை நாராய ணசாமி, பெரம்பலூர் ஏ.கே.ராஜேந்திரன், வேலூர் பாலவிநாய கம், மதுராந்தகம் வி.கே.பெரு மாள், சீனிவாசன், செங்கல்வராயன், திருத்தணி ஜெயச்சந்திரன் ஆகி யோர் பங்கேற்று உரையாற்றினர். பொதுத்துறைகளை பாதுகாப்பது அரசின் கடமை “கரும்பு விவசாயிகள் குரலை சட்டமன்றத்தில் பேசும் ஊழியனாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ள்ளேன். ஏற்கனவே தஞ்சாவூர் ஆரூரான் சர்க்கரை ஆலை பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் பேசினேன்.  அதன் பிறகு அதிகாரி கள் தலையிட்டு பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப் பட்டது. கரும்பு விவசாயிகள் கோரிக் கைகளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சட்டமன்ற பேசு வேன்.முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.  மூடிக்கிடக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை இயக்க ஒன்றிய பாஜக அரசு மற்றும் தமிழ்நாடு அரசு நிதியை ஒதுக்கீடு செய்து, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை பாதுகாக்க வேண்டும். இது அரசின் கடமையாகும். எல்லா கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கினால் விவசாயிகள் வாழ்வு மலரும், வேலை வாய்ப்பு பெருகும், அந்நிய செலாவணி வருவாய் பெரு கும்” என  நாகை மாலி தனது துவக்க உரையில் தெரிவித்தார். போராட்டத்திற்கு அழைப்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் டி.ரவீந்திரன் பேசுகையில், “நெல், கரும்பு சாகுபடிக்கு தேவைப் படும் பொருட்கள் மற்றும் உற்பத்தி செலவுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யவில்லை. இதற்கு காரணம், ஒன்றிய பாஜக அரசு கடைபிடிக்கும் தவறான வேளாண் கொள்கையாகும். இதை கண்டித்து,  கருப்பு விவசாயிகளின் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தியும் வருகிற மே மாதம் 27 ஆம் தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட் டம் நடைபெறும். இதில் ஆயிரக்க ணக்கான விவசாயிகள் பங்கேற்க வேண்டும்”என்றார்.  தீர்மானம் ஒன்றிய மோடி அரசு, 9.5 பிழி திறன் கொண்ட கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,500 விலை வழங்க வேண்டும், வருவாய் பங்கேற்று முறை சட்டத்தை ரத்து செய்துவிட்டு, மாநில அரசு கரும்புக்கான பரிந்துரை விலையை (State Advised Price- SAP), அறிவித்து ஒரு டன் கரும்புக்கு  ரூ.4 ஆயிரம் விலை வழங்க வேண்டும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை புதுப்பித்து, மேம்படுத் திட ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட் டிற்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில், பத்தாயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது, அதற்கு ஏற்ப திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பித்து மேம்படுத்திட  தமிழ்நாடு அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்,   தென் மாவட்டங்களில் உள்ள  ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலை யான அலங்காநல்லூர் தேசிய கூட்டு றவு சர்க்கரை ஆலை 2018 முதல் மூடி கிடக்கிறது, இதை திறக்க தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளில் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி உள்ளது. மாநில சட்டமன்றத்தில் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் அறிவித்தார்,  ஆய்வு குழு அமைத்து 27 கோடி ரூபாய் நிதி  ஒதுக்க வேண்டும் என பரிந்துரைக் கப்பட்டது, ஆனால் ஆனால் இன்று வரை ஆலை திறக்கப்படவில்லை. வரும் அரவை பருவத்தில் அலங்கா நல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து செயல்படுத்திட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.