சென்னை, ஜூன் 28 - மணிப்பூர் முதலமைச்சர் பதவி விலக வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். மணிப்பூர் மாநில கலவரத்திற்கு காரணமான பாஜக-வை கண்டித்து புதனன்று (ஜூன் 28) சென்னை யில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: ரோம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்த தாக கூறுவார்கள். அதே போன்று மோடி அரசு செயல் படுகிறது. மணிப்பூர் கலவரத் தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் கடைகள், 5 ஆயிரம் வீடுகள் எரிக்கப்பட்டு, 200 தேவாலயங்கள், 17 கோவில் கள் தாக்கப்பட்டு 60 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 50 ஆயிரம் பேர் மாநிலத்தை விட்டு வெளி யேறி உள்ளனர். இவ்வளவு நடந்தும் மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேச மறுக்கி றார். மணிப்பூர் எதிர்க்கட்சித் தலைவர்கள் 10 நாட்கள் தில்லியில் காத்து கிடந்தும் பிரதமரை சந்திக்க முடிய வில்லை. பொது சிவில் சட்டம் தேவை யில்லை என்று சட்ட ஆணை யம் கூறியுள்ளது. இந்த நிலை யில், இருவிதமான சட்டங்களை வைத்து நாட்டை ஆட்சி செய்ய முடியாது. எனவே பொது சிவில் சட்டம் தேவை என்று பிரதமர் பேசு கிறார். மக்களை பிரித்து தேர்தலை சந்திக்க இத்தகைய நிலைபாட்டை பிரதமர் எடுத்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒன்றுதானே. அதை அமல்படுத்த மறுப்பது ஏன்? அரசியலமைப்பு சட்டத்தின் 350வது பிரிவு, மாநிலத்தின் மீது வெளியில் இருந்து ஆக்கிரமிப்பு வந்தாலோ, மாநிலத்திற்குள் கலவரம் ஏற்பட்டாலோ அந்த மாநி லத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது என்று கூறுகிறது. மணிப்பூரில் அமைதி கொண்டு வர ஒன்றிய அரசு தலையிடா தது ஏன்? மணிப்பூரின் மக்கள் தொகை 36 லட்சம். கடலூர் மாவட்டத்தின் மக்கள் தொகை யும், மணிப்பூரின் மக்கள் தொகையும் ஒன்றுதான். மே 3ஆம் தேதியிலிருந்து அங்கு கலவரம் நடந்து கொண்டிருக் கிறது. மெய்டெய், குக்கி இரு பிரிவு மக்களையும் தூண்டி விட்டு பாஜக கலவரம் தொடர காரணமாக உள்ளது. 2017, 2019 தேர்தல்களில் தங்களை ஆதரிக்க கோரி பாஜக தலை வர் ராம் மாதவ், யுனைடெட் குக்கி லிபரேசன் முன்னணி தலைவருக்கு பணம் கொடுத் துள்ளார். தற்போது மெய்டெய் மக்களை பாஜக ஆதரிக்கி றது. இதனால் கலவரம் தொடர்கிறது.
அமெரிக்கா அதிபரின் மனைவிக்கு என்ன பரிசு கொடுக்க வேண்டும் என்பதை நுணுக்கமாக யோசித்து, 10 மாநிலங்களில் தயாரிக்கப் பட்ட பொருட்களை கொண்டு சென்று பிரதமர் மோடி கொடுக்கிறார். அதற்கு கவனம் செலுத்தும் பிரதமர், மணிப்பூரை பற்றியும் அங்கு கொல்லப்படும் அப்பாவி மக்கள் பற்றியும் கவலைப்படா மல் உள்ளார். மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, மக்களை மத ரீதியாக பிளவு படுத்திக் கொண்டே இருக்கிறது. மணிப்பூரில் மாநில அரசால் வன்முறையை தடுக்க முடியவில்லை. எனவே, மாநில முதலமைச்சர் பதவி விலக வேண்டும். அதனை செய்ய மறுத்தால், அவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் குடி யரசு தலைவருக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, செய்தி தொடர்பாளர் கோபண்ணா, தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சிபிஐ துணை மாநிலச் செயலாளர் மு.வீர பாண்டியன், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் பேசினர்.