tamilnadu

மருத்துவர்கள் நலன் காக்க உறுதியாக குரல் கொடுப்போம்!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மல்லப்பனூர் பிரிவு பகுதி யில், மருத்துவப் போராளி மரு.லட்சுமி நரசிம்மனின் 5 ஆம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு வெள்ளி யன்று நடைபெற்றது.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ.சண்முகம், தமிழக வாழ்வு ரிமை கட்சி மாநில தலைவர் தி. வேல்முருகன் எம்எல்ஏ., இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் தா.சந்தானம், பேராசிரியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பெ.சண்முகம் பேசுகையில், அரசு மருத்துவர் களின் கோரிக்கைகள் குறித்து 2021  ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு  பிறகு முதல்வரிடம் வலியுறுத்தப் பட்டது. ஆனால், 4 ஆண்டுகளாகி யும் இதுவரை அரசு நிறைவேற்ற வில்லை. 2021 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் தமிழக மக்க ளுக்கு 505 வாக்குறுதி கொடுத்த னர். தமிழக முதல்வர் சமீபத்தில் 78  சதவீத வாக்குறுதிகளை நிறை வேற்றிவிட்டேன். மீதி 22 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்றார். முதல்வர் 100 சதவீத வாக்குறுதியையும் நிறைவேற்ற  வேண்டும் என வலியுறுத்துகிறேன். இதனால் 2026 தேர்தலில் நல்ல பயன் கிடைக்கும். 

ஏழை, எளிய மக்கள் சேமிப்பை செலவழித்து, உயிரை காப்பாற்ற தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அனைவருக்கும் சுகாதாரம் என்பது அடிப்படை உரி மையாக்கப்பட வேண்டும். சுகா தாரத்துறைக்கு ஒன்றிய அல்லது மாநில அரசு யாராக இருந்தாலும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும். மக்களுக்கு அனைத்து வகையான சிகிச்சைகளையும் அளித்தால் மட்டுமே சுகாதாரமான வாழ்வு கிடைக்கும். இதற்கு தேசிய மற்றும் மாநில அளவில் எங்கள் கட்சி குரல் கொடுக்கும். எங்களுடைய எம்எல்ஏக்கள் வரும்  பட்ஜெட் கூட்டத்தொடரில் மருத்து வர்களின் கோரிக்கைகள் குறித்து வலுமிக்க குரலை எழுப்புவர் என்று  கூறினார்.

முன்னதாக, நினைவேந்தல் நிகழ்விற்கு, லட்சுமி நரசிம்மனின் இணையர் அனுராதா தலைமை ஏற்றார். மக்கள் நல்வாழ்வு மருத்து வர்கள் சங்க மருத்துவர்கள் கே. பகத்சிங், எஸ்.பெருமாள் பிள்ளை முன்னிலையில், நினைவு ஜோதி கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோனூர்  ராஜம்மா மருத்துவமனை மருத்து வர் எம்.ராஜம்மாள் ரத்ததான  முகாமை துவக்கி வைத்தார். இதில்,  சிறந்த சமூக செயல்பாட்டிற்கான விருதாளர்களுக்கு பேராசிரியர் மருத்துவர் ந.லட்சுமி நரசிம்மன் நினைவு விருது வழங்கி கௌர விக்கப்பட்டது. நிகழ்வில், மருத்துவர்கள் சங்கத் தின் தலைவர் பி.சுவாமிநாதன், மக்கள் நல்வாழ்வு மருத்துவர் சங்கத்தின் நிர்வாகி சி.கருணா கரன், தமிழ்நாடு மருத்துவ அலுவ லர்கள் சங்கத்தின் மாநில தலை வர் மு.அகிலன் மற்றும் குடும்பத்தி னர், கிராம மக்கள் திரளானோர் பங்கேற்று, மரு.லட்சுமி நரசிம்மன் நினைவிடத்தில் மலர் தூவி மரி யாதை செலுத்தினர்.