tamilnadu

img

‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலரின் கொள்கைகளை நிறைவேற்றுவோம்

‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலரின் கொள்கைகளை நிறைவேற்றுவோம்

கே. பாலகிருஷ்ணன் பேச்சு

“’சிந்தனைச் சிற்பி’ தோழர்  ம.சிங்காரவேலரின் கொள்கைகளை இந்த மண்ணிலே அமல்படுத்தும் மகத் தான பணியை மேற்கொள்வோம்” என வடசென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். ‘சிந்தனைச் சிற்பி’ சிங்கார வேலரின் 165-ஆவது பிறந்த நாளை யொட்டி, “சென்னையை தோழர் சிங்காரவேலரின் சென்னையாக்கு வோம்” என்ற முழக்கத்துடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24- ஆவது அகில இந்திய மாநாட்டுக்கு நிதி திரட்டும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சிங்காரவேலரின் பன்முக ஆளுமை

அப்போது, “சிறந்த வழக்கறிஞ ராகவும், வணிகராகவும் விளங்கிய சிங்காரவேலர், நிறைய சொத்துக் களைச் சேர்த்த செல்வந்த குடும்பத் தைச் சேர்ந்தவராக இருந்தும், மார்க்சி யத்தின் மீது ஈர்ப்பு கொண்டு தன்னை கம்யூனிஸ்டாக மாற்றிக் கொண்டார். தமிழகத்தில் இன்றைக்கு எத்த னையோ சீர்திருத்த, பகுத்தறிவு இயக்கங்கள் இருந்தாலும், அவை அனைத்திற்கும் விதையிட்டவர் ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் என்று கூறினால் அது மிகையா காது என பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

முன்னோடி தொழிற்சங்க போராளி

தொடர்ந்து பேசிய அவர், “தொழிற்சங்கம் அமைப்பதற்கே உரிமை மறுக்கப்பட்ட அடக்குமுறை நிறைந்த காலகட்டத்தில், பி&சி போன்ற தொழிற்சாலைகளில் தொழி லாளர்களின் அடிப்படை உரிமை களுக்காக முதன்முதலில் குரல் கொடு த்தவர் சிங்காரவேலர். திரு.வி.க, சர்க்கரை செட்டியார் ஆகியோருடன் இணைந்து தொழிற்சங்க இயக்க த்தை சென்னையிலும் தமிழகத்திலும் உருவாக்கிய மிகப்பெரிய தலை வராக திகழ்ந்தார்

தொழிலாளர் - விவசாயி ஒற்றுமை போராட்டம்

இந்தியாவிற்கு பரிபூரண விடு தலை வேண்டுமெனில், தொழிற் சாலைத் தொழிலாளர்களை மட்டும் திரட்டி போராடுவது போதாது என்றும், கிராமப்புற பட்டி தொட்டி களில் இருக்கும் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் இணைத்து வர்க்கப் போராட்டம் நடத்துவதன் மூலமே அடிப்படை சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்று உறுதியுடன் கூறினார்.

மே தின முன்னோடி

வரலாற்று சிறப்புமிக்க மே தினத்தை கொண்டாடும் வகையில் இந்தியாவில் முதன்முதலில் மெரினா கடற்கரையில் கொடியேற்றி கொண்டாடிய பெருமைக்குரியவர்.

 சமூக நீதிக்கான குரல்

சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகளை கடுமையாக விமர்சித்த சிங்காரவேலர், பிராமணிய தத்து வத்தையும், ஆதிக்கத்தையும், வர்ணா ஸ்ரம தர்மத்தையும் எதிர்த்து சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களம் கண்டார். தந்தை பெரியார், தோழர் ஜீவா ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். இன்றைய நீதித்துறையின் பிராமணிய மேலாதிக்கத்தை சுட்டிக்காட்டி, இந்நிலை சிங்காரவேலர் காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்” என்றார் பாலகிருஷ்ணன். அமெரிக்காவில் சட்டவிரோத மாக தங்கியிருந்த இந்தியர்கள் விலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்ட அவலத்தை எடுத்துக்காட்டிய பால கிருஷ்ணன், இந்த அவமானத்திற்கு எதிராக இந்திய அரசு கொந்தளிக்க வில்லை என விமர்சித்தார். இதை வெளிப்படுத்திய ‘ஆனந்த விகடன்’ வலைதளம் முடக்கப்பட்டதையும் கண்டித்தார்.  அதானி மோசடி வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தபோது, இந்தியாவின் மானத்தை கெடுத்த அதானி மீது நட வடிக்கை எடுக்காமல், வழக்கை தள்ளிவைக்க கோரிய பிரதமரின் செயலை கடுமையாக விமர்சித்தார். மேலும் மத்திய அரசின் வக்பு சட்டத் திருத்தம், 100 நாள் வேலைத்திட்ட நிதி நிறுத்தம், கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி போன்றவற்றை எடுத்துக் காட்டி ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆத ரவு, மக்கள் விரோத நடவடிக்கை களைச் சாடினார்.

மதவாத சக்திகளை முறியடிப்போம்

வறுமை, வேலையின்மை அதி கரித்து வரும் நிலையில், மக்கள் கொதித் தெழாமல் இருக்க மதக்கலவரங் களை உருவாக்கும் பாஜக-வின்  முயற்சிகளை முறியடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருவதாகவும், அதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கோரினார்.