tamilnadu

img

பொன்னுலகம் அமையும் வரை போராடுவோம்!

சென்னை, நவ. 9 - ஆனந்த விகடன் குழுமத்தைச் சேர்ந்த ‘அவள் விகடன்’ ஏடு, பெண்க ளுக்காகவே நடத்தப்படும் இதழாகும். அது தனது 27-ஆவது ஆண்டைக் கொண்டாடுகிறது. இதில், கடந்த 7 ஆண்டுகளாக, சமூக சேவை, இலக்கியம், விவசாயம், விளை யாட்டு, சினிமா என பற்பல தளங்களி லும் சிகரம் தொட்டுக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்களைப் பாராட்டி பெருமைப்படுத்தும் வகையில், ‘அவள் விருது’களையும் வழங்கி வரு கிறது, ‘அவள் விகடன்’ ஏடு. 

‘தமிழன்னை விருது’

அந்த வகையில், தற்போது ‘7-ஆவது அவள் விருதுகள்’ விழா மற்றும் ‘பெண்ணென்று கொட்டு முரசே  - சாதனைப் பெண்களின் சங்கமம்’ நிகழ்ச்சி நவம்பர் 8- ஆம் தேதி மாலை சென்னையில் நடைபெற்றது.  இந்த விழாவில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர்களில் ஒருவ ரான உ. வாசுகி, திரைக்கலைஞர்கள் லட்சுமி, சிம்ரன், நிகிலா விமல் உள்ளிட்டோரும், இன்னும் பல சாத னைப் பெண்களும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். குறிப்பாக மாதர் சங்கத் தலைவர் உ. வாசுகி, கால் நூற்றாண்டுக்கும் மேலாக சமூக - அரசியல் போராட்டங்க ளில் சமரசம் இன்றி இயங்குவதைப் பாராட்டி அவருக்கு அவள் விகடனின் ‘தமிழன்னை’ விருது வழங்கப்பட்டது. விருது வழங்கிய நீதிபதிகள்! உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கள் விமலா, தாரணி ஆகியோர் இந்த விருதை உ. வாசுகிக்கு வழங்கினர்.  அப்போது, “காவல்துறையினரின் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிதம்பரம் பத்மினி க்கு நீதி கிடைக்கவும், பெண்கள்  பலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பிரேமானந்தா போன்ற வர்கள் கைது செய்யப்படவும், அவர்களுக்குத் தண்டனை கிடைக்க வும் மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்தி லும் போராடியவர் உ. வாசுகி. இவை தவிர, ஒன்றிய - மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக இன்றுவரை களம்கண்டு வருபவர் உ. வாசுகி” என்று பாராட்டுத் தெரிவிக் கப்பட்டது.

முதல் வரிசை முகம் உ.வாசுகி! 

“உ.வாசுகி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக இருந்த ஆர். உமாநாத், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான பாப்பா உமாநாத்தின் மகள். பின்னாளில் அதே மாதர் சங்கத்தில் தொண்டராக இணைந்து, பத்தாண்டுகள் அதன் பொதுச்செயலாளர், தற்போது துணைத் தலைவர்களில் ஒருவர்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில செயற்குழு உறுப்பினர், மத்தி யக்குழு உறுப்பினர் என பொறுப்பு களுக்கும், போராட்டங்களுக்கும் தன்னை ஒப்புக் கொடுத்தவர். இந்திய அளவில் ஒரு கோடி உறுப்பினர்களும், தமிழகத்தில் 7 லட்சம் உறுப்பினர்களும் கொண்டது மாதர் சங்கம். அதன் மீடியா விமர்சனக் குழுவின் அமைப்பாளரான உ. வாசுகி, திரைப்படங்களில், விளம்பரங்களில், பாடப் புத்தகங்களில் பெண்களின் மலிவான சித்தரிப்பை எதிர்த்து, அதனை சமூகத்தின் கவனத்தில் புகுத்திய முன்னோடி” என்றும் உ. வாசுகி அறிமுகப்படுத்தப்பட்டார்.

சமர்ப்பணம்!

விருதைப் பெற்றுக் கொண்ட உ.வாசுகி பேசுகையில், “இடதுசாரி கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் ஆயிரம் பொருளாதார, குடும்பப் பிரச்சனைக ளைக் கடந்து, பெண்களுக்காக- சமூக விடுதலைக்காகப் போராடும் போ ராட்டக் களத்திற்கு வரும் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். என்னுடைய தந்தை - தாய் இரு வரும் மக்களுக்காக பல போராட் டங்கள் நடத்தி சிறைச்சென்றவர்கள். எவ்வளவு கடுமையான தருணங்களி லும் போராட்டக் குணத்தைக் கைவிடாத வர்கள். அவர்களுக்கும், என் குழந்தை கள் -குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மதம், பாலின சமத்துவ மின்மைக்கு எதிரான வர்க்கப் போராட் டம் மூலம் சமத்துவமான பொன்னு லகை அமைக்கும் வரை மக்களுக்காக வும் சமூகத்திற்காகவும் கம்யூனிஸ்டுக ளாகிய நாங்கள் தொடர்ந்து போராடுவோம்!” என்று முழங்கினார்.