சென்னையில் இடதுசாரிகள்ஆர்ப்பாட்டம்!
மோடி அரசே, மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை நிறுத்து!
நக்சல் அழித்தொழிப்பு என்ற பெயரில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை போலி என்கவுண்ட்டர் மூலம் ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகள் படுகொலை செய்து வருகின்றன. மாவோயிஸ்டுகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த பிறகும் அரங்கேற்றப்படும் இந்த படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும்; போலி என்கவுண்ட்டர்கள் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி, இடதுசாரிக் கட்சிகள் திங்களன்று (ஜூன் 2) நாடு தழுவிய கண்டன இயக்கம் நடத்தினர். இதனொரு பகுதியாக, சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., சிபிஐ (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரேசன் மாநில பொதுச்செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.