tamilnadu

img

மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தில் குறுவை விவசாயப் பணிகள் தொடக்கம்

மயிலாடுதுறை/ நாகப்பட்டினம், மே 21- மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டி னம் மாவட்ட விவசாயிகள் குறுவை விவ சாயத்திற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளனர். குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி  மற்றும் மயிலாடுதுறை தாலுகாகளில்  ஏறக்குறைய 15,000 ஹெக்டேர் பரப்பளவில் நாற்றங்கால் மற்றும் விதைப் பாத்திகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மொத்த சாகுபடிப் பரப்பில் பாதிக்கு மேல் ஆழ்துளை கிணறுகளையே பாசன ஆதாரமாக நம்பியுள்ளது. குத்தாலம் தாலுகாவில் உள்ள  விவசாயிகள் மற்ற பகுதிகளை விட  விவசாயத்தை சிறப்பாகத் தொடங்கி யுள்ளனர். மாவட்டத்தில் குறுவை பருவ  இலக்கு 39,000 ஹெக்டேர் என நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதுவரை 8,000  ஹெக்டேரில் நடவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேவையான அளவு உரங்களை தயார் நிலையில் வைக்க  வேளாண் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்கிறார் வேளாண் இணை இயக்குநர் ஜே.சேகர்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறு வைப் பருவத்தில் நெல் சாகுபடி செய்ய  20,000 ஹெக்டேர் இலக்கு நிர்ண யித்துள்ளது, கடந்த ஆண்டு 17,500 ஹெக்டேரை விட சற்று அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) வி.தேவேந்திரன் தெரி வித்தார். மாவட்டத்தில் பெரும்பாலான பகுதி கள் கால்வாய் பாசனத்தையே நம்பி யுள்ளதால், கோடை உழவுப் பணி களை மேற்கொள்ள விவசாயிகள் அறி வுறுத்தப்பட்டுள்ளனர். திருமருகல், கீழ்வேளூர் போன்ற சில பகுதிகளில் நிலத்தடி நீரை நம்பி விவசாயிகள் உள்ளனர். இரு மாவட்டங்களிலும், “ஏ” மற்றும்  “பி” வகை கால்வாய்களில் தூர்வாரும் நடவடிக்கையை நீர்வளத் துறை மேற்கொண்டு வருகிறது. மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து ஜூன் 12-ஆம்  தேதி தண்ணீர் திறக்கப்பட வாய்ப் புள்ளதால், சிறிய வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் வேளாண் பொறி யியல் துறை மற்றும் மாவட்ட ஊரக  வளர்ச்சி முகமை மூலம் மேற்கொள் ளப்பட்டது. டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை பருவத்திற்கு ஆடுதுறை (ஏடிடி)  நெல் ரகத்தையே விரும்புகின்றனர். ஏடிடி 43, ஏடிடி 45, ஏடிடி 63 வகை களுக்கு நாற்றங்கால் வளர்க்கப் பட்டுள்ளது. மேலும் திருப்பதிசாரம் (டிபிஎஸ்-5) ரகங்களை சாகுபடி செய்வதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.