புதுக்கோட்டை, அக்.28 - புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஷ்வரா மெட்ரிக். மேல் நிலைப் பள்ளி மாணவர்கள், எகிப்து நாட்டில் நடைபெற்ற உலக அளவி லான டிரையாத்தல் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ள னர். இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் ம.சந்தோஷிகா, ஏழாம் வகுப்பு பயிலும் ம.நிஷாந்த் கிருஷ்ணன், ஒன்ப தாம் வகுப்பு பயிலும் ம.தனுஷ்கி ருஷ்ணன் ஆகிய மூவரும் ஏற்கனவே உத்தரகண்ட் மாநிலத்தில், இந்திய அளவில் நடைபெற்ற டிரையாத்தலான் (Swimming, Running & Shooting) போட்டியில் வெற்றி பெற்று சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில், தற்போது எகிப்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச போட்டி களில் கலந்துகொண்டு எம்.தனுஷ்கி ருஷ்ணன் பையாத்தலான் போட்டியில் 6 ஆவது இடமும், டிரையாத்தலானில் 8 ஆவது இடமும், டீம் மெடலில் 2-ஆவது இடமும் பெற்றுள்ளார். எம்.நிஷாந்த் கிருஷ்ணன் பையாத்தலானில் 7 ஆவது இடமும், டிரையாத்தலானில் 8 ஆவது இடமும் பெற்றுள்ளார். எம்.சந்தோ ஷிகா பையாத்தலானில் 4 ஆவது இட மும், டிரையாத்தலானில் 6 ஆவது இடமும், டீம் மெடலில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளார். இந்த மாணவர்கள் டிரையாத்த லான் போட்டிகளில் சர்வதேச அளவில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாண வர்களுக்கு, பள்ளியின் முதல்வர் கவி ஞர்தங்கம் மூர்த்தி மற்றும் பள்ளியின் இயக்குநர் சுதர்சன் ஆகியோர் நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்த னர்.