திருவனந்தபுரம், ஜன.25- திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோவளம் கடற்கரை சாகச நீர் விளையாட்டுகளுக்கு தயாராகி வருகிறது. சுற்றுலாத் தலமான கோவளம் கடற்கரையை சாகச நீர் விளையாட்டுகளுக்கான மையமாக மாற்றும் திட்டத்தை சுற்றுலாத் துறை தொடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகளை மீண்டும் அழைத்து வருவதற்காக மாநில சுற்றுலாத் துறை மற்றும் டிடிபிசி ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படுகிறது. சர்ஃபிங் மற்றும் ஸ்கூபா டைவிங் தொடங்கும் மையத்தை தயாரிப்பதன் ஒரு பகுதி யாக நீர் விளையாட்டுகளை நடத்த மிதக்கும் படித்துறை கட்டப்படும் என கேரள சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.