tamilnadu

img

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கரூரில் மகளிர் தினம் கொண்டாட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 
கரூரில் மகளிர் தினம் கொண்டாட்டம்'

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.  பரணி பார்க் கல்விக் குழுமத்தின் தாளாளரும், அறிவியல் இயக்க மாவட்ட முன்னாள் தலைவருமான பத்மாவதி மோகனரங்கன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். திலகவதி வரவேற்று பேசினார். மகப்பேறு மருத்துவர் தீபா,  மகளிரும் மருத்துவமும் என்ற தலைப்பில் பெண்களுக்கு வரக்கூடிய கருப்பை வாய் புற்றுநோய் பற்றியும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியும் பேசினார். தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பன்முகத்தன்மை என்ற தலைப்பில் க.பரமத்தி துணை காவல் ஆய்வாளர் பி. ரம்யா பேசினார். அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை விரிவுரையாளர் மருத்துவர் சூரிய பிரபா, பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் பற்றியும், அதிலிருந்து பெண்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொள்வது, தடுப்பது குறித்து பேசினார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் டி. திருநாவுக்கரசு,  பெண்கள் முன்னேற்றம், பெண்கள் சமநிலை என்ற தலைப்பில் பேசினார்.    அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர்  ஐ. ஜான்பாஷா, மாவட்டப் பொருளாளர் தமிழரசி மற்றும் வானவில் மன்ற உறுப்பினர் பிரகலவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.