tamilnadu

img

கரூர் பரணி பார்க் பள்ளி அபார சாதனை

கரூர் பரணி பார்க் பள்ளி அபார சாதனை

கரூர், மே 8 - கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மெச்சத்தகுந்த சாதனை புரிந்துள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வி.தனஸ்ரீ-593, எஸ்.தாரணி-591, கே.ஜெயஸ்ரீ-591, ஜி.ஜி.பிரணவ் ஸ்ரீநிதி-589 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.  மேலும் டி.கார்த்தீபன் நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், அண்ணா  பல்கலைக் கழக பொறியியல் கட் ஆஃப் 200/200 பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்று அபார சாதனை படைத்துள்ளார். மேலும் 580 மதிப்பெண்களுக்கு மேல் 12 மாண வர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 76 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 177 மாணவர்களும் பெற்றுள்ளனர். கணினி அறிவியலில் 19 மாணவர்களும், கணிதத்தில் 4 மாணவர்களும், இயற்பியலில் ஒரு மாணவரும், வேதியியலில் 3 மாணவர் களும், கணினி பயன்பாட்டியலில் 3 மாணவர் களும், கணக்குப் பதிவியியலில் 7 மாணவர் களும், வணிகவியலில் 3 மாணவர்களும், பொருளியலில் 4  மாணவர்களும், ஆங்கி லத்தில் ஒரு மாணவரும் மொத்தம் 45 மாண வர்கள் நூற்றுக்கு நூறு  மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசால் மாநில அளவில் நடத்தப் படும் தமிழ்மொழி இலக்கியத் திறனறிதல் தேர்வில் 235 மாணவர்கள் வெற்றி பெற்று ஆண்டுக்கு ரூ.36,000 வீதம், மொத்தம் ரூ.84 லட்சத்து 60 ஆயிரம் பரிசுத் தொகை வென்றுள்ளனர்.  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அபார சாதனை படைத்துள்ள மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழா விற்கு பரணிபார்க் கல்விக் குழுமத்தின் தாளா ளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தார்.  செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்கா வலர் சுபாஷினி அசோக்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களையும், சாத னைக்கு உறுதுணையாக இருந்த பரணிபார்க் கல்விக்குழும முதன்மை முதல்வர் முனை வர் சி.ராமசுப்ரமணியன், முதல்வர் கே.சேகர், துணை முதல்வர் ஜி.நவீன்குமார், மேல்நிலை ஒருங்கிணைப்பாளர்கள் வி.பானுப்பிரியா, ஏ. கணேசன், இருபால் ஆசிரியர்களை பாராட்டி னர்.